Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

931

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.

932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

933

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்போஒய்ப் புறமே படும்.

934

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்வறுமை தருவதொன்று இல்.

935

கவறும் கழகமும் கையும் தருக்கிஇவறியார் இல்லாகி யார்.

936

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்முகடியான் மூடப்பட் டார்.

937

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்கழகத்துக் காலை புகின்.

938

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்துஅல்லல் உழப்பிக்கும் சூது.

939

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்அடையாவாம் ஆயங் கொளின்.

940

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்உழத்தொறூஉம் காதற்று உயிர்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com