1221
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.
1222
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
1223
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.
1224
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும்.
1225
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை.
1226
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
1227
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.
1228
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
1229
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
1230
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.




