201
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை என்னும் செருக்கு.
202
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
203
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்கும் செய்யா விடல்.
204
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.
205
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றும் பெயர்த்து.
206
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.
208
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அஇஉறைந் தற்று.
209
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்துன்னற்க தீவினைப் பால்.
210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.




