Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

291

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்தீமை இலாத சொலல்.

292

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கும் எனின்.

293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

294

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.

295

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.

296

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.

297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.

298

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.

299

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.

300

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com