471
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல்.
472
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்செல்வார்க்குச் செல்லாதது இல்.
473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கிஇடைக்கண் முரிந்தார் பலர்.
474
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னைவியந்தான் விரைந்து கெடும்.
475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்சால மிகுத்துப் பெயின்.
476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்உயிர்க்கிறுதி ஆகி விடும்.
477
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்போற்றி வழங்கு நெறி.
478
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லைபோகாறு அகலாக் கடை.
479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோலஇல்லாகித் தோன்றாக் கெடும்.
480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.




