Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

511

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்ததன்மையான் ஆளப் படும்.

512

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவைஆராய்வான் செய்க வினை.

513

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவு.

514

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்வேறாகும் மாந்தர் பலர்.

515

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

516

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடுஎய்த உணர்ந்து செயல்.

517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.

518

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.

519

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாகநினைப்பானை நீங்கும் திரு.

520

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்கோடாமை கோடா துலகு.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com