Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

591

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்உடையது உடையரோ மற்று.

592

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமைநில்லாது நீங்கி விடும்.

593

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்ஒருவந்தம் கைத்துடை யார்.

594

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலாஊக்க முடையா னுழை.

595

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்உள்ளத் தனையது உயர்வு.

596

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றதுதள்ளினுந் தள்ளாமை நீர்த்து.

597

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்பட்டுப்பா டூன்றுங் களிறு.

598

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்துவள்ளியம் என்னுஞ் செருக்கு.

599

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை஦வ்ருஉம் புலிதாக் குறின்.

600

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்மரம்மக்க ளாதலே வேறு.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com