221
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்குறியெதிர்ப்பை நீர துடைத்து.
222
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.
223
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.
224
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணும் அளவு.
225
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியைமாற்றுவார் ஆற்றலின் பின்.
226
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.
228
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.
229
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.
230
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.




