Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.

192

பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கண் செய்தலிற் றீது.

193

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.

194

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.

195

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.

196

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.

197

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.

198

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்பெரும்பயன் இல்லாத சொல்.

199

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.

200

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com