Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 191

அறத்துப்பால்இல்லறவியல்20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.

pallAr muniyap payanila solluvAnellArum eLLap paTum

Meaning in English

Words without sense, while chafe the wise, Who babbles, him will all despise

பொருள் / உரை

மு.வரதராசன்

கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்

பரிமேலழகர்

பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான் - அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயன் இலவாகிய சொற்களைச் சொல்லுவான், 'எல்லாரும் எள்ளப்படும்' - எல்லாரானும் இகழப்படும். (அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது.)

சாலமன் பாப்பையா

பலரும் கேட்டு வெறுக்கப், பயனற்ற சொற்களைச் சொல்லுபவன் எல்லாராலும் இகழப்படுவான்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com