Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 193

அறத்துப்பால்இல்லறவியல்20. பயனில சொல்லாமை

நயனிலன் என்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.

nayanila nenpatu sollum payanilapArit turaikkum urai

Meaning in English

Diffusive speech of useless words proclaims A man who never righteous wisdom gains

பொருள் / உரை

மு.வரதராசன்

ஒருவன் பயனில்லா பொருள்களைப் பற்றி விரிவாகச் சொல்லும் சொற்கள், அவன் அறம் இல்லாதவன் என்பதை அறிவிக்கும்.

பரிமேலழகர்

பயன் இல பாரித்து உரைக்கும் உரை - பயன் இலவாகிய பொருள்களை ஒருவன் விரித்து உரைக்கும் உரைதானே, நயன் இலன் என்பது சொல்லும் - இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும். (உரையால் இவன் 'நயனிலன்' என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி, 'உரை சொல்லும்' என்றார்.)

சாலமன் பாப்பையா

பயனற்ற சொற்களை விரித்துப் பேசும் ஒருவன் பேச்சு அவன் நீதியற்றவன் என்பதைக் காட்டிவிடும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com