Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 196

அறத்துப்பால்இல்லறவியல்20. பயனில சொல்லாமை

பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல்மக்கட் பதடி யெனல்.

payanilsol pArATTu vAnai makanenalmakkaT pataTi yenal

Meaning in English

Who makes display of idle words' inanity, Call him not man, -chaff of humanity

பொருள் / உரை

மு.வரதராசன்

பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.

பரிமேலழகர்

பயன்இல்சொல் பாராட்டுவானை மகன் எனல் - பயன் இல்லாத சொற்களைப் பலகாலுஞ் சொல்லுவானை மகன் என்று சொல்லற்க, மக்கட் பதடி எனல் - மக்களுள் பதர் என்று சொல்லுக. (அல் விகுதி வியங்கோள், முன் எதிர்மறையினும், பின் உடன்பாட்டினும் வந்தது. அறிவு என்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறு பாட்டானும் பயன் இல்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com