1131
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி.
1132
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
1133
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
1134
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
1135
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
1136
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
1137
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணின் பெருந்தக்க தில்.
1138
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
1139
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
1140
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.




