1301
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.
1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.
1303
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.
1304
ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.
1305
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைபூஅன்ன கண்ணார் அகத்து.
1306
துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.
1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்றுகொல் என்று.
1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.
1309
நீரும் நிழலது இனிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.
1310
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.




