Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

1211

காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.

1212

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.

1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.

1214

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு.

1215

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.

1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.

1217

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.

1218

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

1219

நனவினால் நல்காரை நோவர் கனவினால்காதலர்க் காணா தவர்.

1220

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்காணார்கொல் இவ்வூ ரவர்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com