Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1216

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.

nanavena onRillai Ayin kanavinARkAtalar nIngkalar man

Meaning in English

And if there were no waking hour, my love In dreams would never from my side remove

பொருள் / உரை

மு.வரதராசன்

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

பரிமேலழகர்

(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com