Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள்

1041

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.

1042

இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.

1043

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை.

1044

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.

1045

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.

1046

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.

1047

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.

1048

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.

1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.

1050

துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com