Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 230

அறத்துப்பால்இல்லறவியல்23. ஈகை

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.

sAtalin innAta tillai initatUumIta liyaiyAk kaTai

Meaning in English

'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give

பொருள் / உரை

மு.வரதராசன்

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

பரிமேலழகர்

சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com