Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 518

பொருட்பால்அரசியல்52. தெரிந்துவினையாடல்

வினைக்குரிமை நாடிய பின்றை அவனைஅதற்குரிய னாகச் செயல்.

vinaikkurimai nATiya pinRai avanaiataRkuriya nAkas seyal

Meaning in English

As each man's special aptitude is known, Bid each man make that special work his own

பொருள் / உரை

மு.வரதராசன்

ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

பரிமேலழகர்

வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)

சாலமன் பாப்பையா

ஒருவனை ஒரு பதவிக்கு உரியவனாக நியமித்த பிறகு, அப்பதவிக்கு உரிய செயல்களை அவனே செய்யுமாறு விட்டுவிடுக.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com