Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 480

பொருட்பால்அரசியல்48. வலியறிதல்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மைவளவரை வல்லைக் கெடும்.

uLavarai tUkkAta oppura vANmaivaLavarai vallaik keTum

Meaning in English

Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leans

பொருள் / உரை

மு.வரதராசன்

தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

பரிமேலழகர்

உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும். ('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.)

சாலமன் பாப்பையா

பொருளாதார நிலையை எண்ணாது பிறர்க்குச் செய்யும் உபகாரத்தால் ஒருவனது செல்வத்தின் அளவு, விரைவில் கெடும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com