Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 202

அறத்துப்பால்இல்லறவியல்21. தீவினையச்சம்

தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.

tIyavai tIya payattalAl tIyavaitIyinum anjsap paTum

Meaning in English

Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe

பொருள் / உரை

மு.வரதராசன்

தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.

பரிமேலழகர்

தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்- அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.)

சாலமன் பாப்பையா

நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com