திருமூலர் அருளிய திருமந்திரம்
8. ஆதார ஆதேயம்

நான்காம் தந்திரம் பாடல் 1155–1254 (100 பாடல்கள்)

நாலித ழாறில் விரிந்தது தொண்ணூறுதானித ழானவை நாற்பத்து நாலுளபாலித ழானவள் பங்கய மூலமாய்த்தானித ழாகித் தரித்திருந் தாளே.

தரித்திருந் தாளவள் தன்னொளி நோக்கிவிரித்திருந் தாளவள் வேதப் பொருளைக்குறித்திருந் தாளவள் கூறிய ஐந்துமறித்திருந் தாளவள் மாதுநல் லாளே.

மாதுநல் லாளு மணாள னிருந்திடப்பாதிநல் லாளும் பகவனும் ஆனதுசோதிநல் லாளைத் துணைப்பெய வல்லீரேல்வேதனை தீர்தரும் வெள்ளடை யாமே.

வெள்ளடை யானிரு மாமிகு மாமலர்க்கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்றபெண்ணொரு பாகம் பிறவிபெண் ணாமே.

பெண்ணொரு பெண்ணைப் புணர்ந்திடும் பேதைமைபெண்ணிடை யாணும் பிறந்து கிடந்ததுபெண்ணுடை யாணென் பிறப்பறிந் தீர்க்கின்றபெண்ணுடை யாணிடைப் பேச்சற்ற வாறே.

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகைமாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்காச்சற்ற சோதி கடவுளுடன் புணர்ந்தாச்சற்று எனுள்புகுந் தாலிக்குந் தானே.

ஆலிக்குங் கன்னி யரிவை மனோன்மணிபாலித் துலகிற் பரந்துபெண்ணா ணாகும்வேலைத் தலைவியை வேத முதல்வியைஆலித்து ஒருவ னுகந்துநின் றானே.

உகந்துநின் றான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடுகந்துநின் றான்நம் உழைபுக நோக்கிஉகந்துநின் றான்இவ் வுலகங்க ளெல்லாம்உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே.

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழிபொத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்தொத்த கருத்துஅது சொல்லகில் லேனே.

சொல்லவொண் ணாத அழற்பொதி மண்டலஞ்சொல்லவொண் ணாது திகைத்தங் கிருப்பர்கள்வெல்லவொண் ணாத வினைத்தனி நாயகிமல்லவொண் ணாத மனோன்மணி தானே.

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்தானே வடவரைத் தண்கடற் கண்ணே.

கண்ணுடை யாளைக் கலந்தங் கிருந்தவர்மண்ணுடை யாரை மனிதரிற் கூட்டொணாப்பண்ணுடை யார்கள் பதைப்பற் றிருந்தவர்விண்ணுடை யார்களை மேலுறைக் கண்டே.

கண்டெண் திசையுங் கலந்து வருங்கன்னிபண்டெண் திசையும் பராசக்தி யாய்நிற்கும்விண்டெண் திசையும் விரைமலர் கைக்கொண்டுதொண்டெண் திசையுந் தொழநின்ற கன்னியே.

கன்னி யொளியென நின்றஇச் சந்திரன்மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்சென்னி யிருப்பிடஞ் சேர்பதி னாறுடன்பன்னி யிருப்பப் பராசக்தி யாமே.

பராசத்தி யென்றென்று பல்வகை யாலுந்தராசத்தி யான தலைப்பிர மாணிஇராசத்தி யாமள வாகமத் தாளாகுங்குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே.

உணர்ந்துல கேழையும் யோகினி சத்திஉணர்ந்துயி ராய்நிற்கும் உன்னத னீசன்புணர்ந்தொரு காலத்துப் போகம தாகிஇணைந்து பரமென் றிசைந்திது தானே.

இதுவப் பெருந்தகை யெம்பெரு மானும்பொதுவக் கலவியும் போகமு மாகிமதுவக் குழலி மனோன்மணி மங்கைஅதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.

யோகநற் சத்தி யொளிபீடந் தானாகும்யோகநற் சத்தி யொளிமுகந் தெற்காகும்யோகநற் சத்தி யுதர நடுவாகும்யோகநற் சத்திதா ளுத்தரந் தேரே.

தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுறவார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும்ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.

தானான வாறெட்ட தாம்பரைக் குண்மிசைதானான வாறுமீ ரேழும் சமைகலைதானான விந்து சகமே பரமெனுந்தானாம் பரவா தனையெனத் தக்கதே.

தக்க பராவித்தை தானிரு பத்தேழில்தக்கெழு மோருத்தி ரஞ்சொல்லச் சொல்லவேமிக்கிடு மென்சக்தி வெண்ணிற முக்கண்ணிதொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தள்அத்துவ மாயல்ல வாய சகலத்தள்வைத்த பராபர னாய பராபரைசத்தியு மானந்த சத்தியுங் கொங்கே.

கொங்கீன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னிபொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்அங்குச பாச மெனுமகி லங்கனிதங்கு மவள்மனை தானறி வாயே.

வாயு மனமுங் கடந்த மனோன்மணிபேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளைஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்தாயு மகளுநல் தாரமு மாமே.

தாரமும் மாகுவள் தத்துவ மாய்நிற்பள்காரண காரிய மாகுங் கலப்பினள்பூரண விந்து பொதிந்த புராதனிபாரள வாந்திசை பத்துடை யாளே.

பத்து முகமுடை யாளெம் பராசத்திவைத்தன ளாறங்க நாலுடன் றான்வேதம்ஒத்தனள் ளாதார மொன்றுட னோங்கியேநித்தமாய் நின்றாளெம் நேரிழை கூறே.

கூறிய கன்னி குலாய புருவத்தள்சீறிய ளாயுல கேழுந் திகழ்ந்தவள்ஆரிய நங்கை யமுத பயோதரிபேருயி ராளி பிறிவுஅறுத் தாளே.

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதைகுறியொன்றி நின்றிடுங் கோமளக் கொம்புபொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கேஅறிவொன்றி நின்றன ளாருயி ருள்ளே.

உள்ளத்தி னுள்ளே யுடனிருந் தைவர்தங்கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்துவள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே.

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்திஇருந்தருள் செய்கின்ற வின்ப மறியார்பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்திருந்த விலக்கி லினிதிருந் தாளே.

இருந்தன ளேந்திழை யென்னுள்ள மேவித்திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந் துன்னிநிரந்தர மாகிய நீர்திசை யோடுபொருந்த விலக்கிற் புணர்ச்சி யதுவே.

அதுவிது வென்னு மவாவினை நீக்கித்துதியது செய்து சுழியுற நோக்கில்விதியது தன்னையும் வென்றிட லாகும்மதிமல ராள்சொன்ன மண்டல மூன்றே.

மூன்றுள மண்டல மோகினி சேர்விடம்ஏன்றுள வீரா றெழுகலை யுச்சியில்தோன்று மிலக்குற வாகுதன் மாமாயைஏன்றன ளேழிரண் டிந்துவோடு ஈறே.

இந்துவி னின்றெழு நாத மிரவிபோல்வந்தபின் நாக்கின் மதித்தெழுங் கண்டத்தில்உந்திய சோதி இதயத் தெழுமொலிஇந்துவின் மேலுற்ற ஈறுஅது தானே.

ஈறது தான்முத லெண்ணிரண் டாயிரம்மாறுத லின்றி மனோவச மாயெழில்தூறது செய்யுஞ் சுகந்தச் சுழியதுபேறது செய்து பிறந்துஇருந் தாளே.

இருந்தன ளேந்திழை யீறதி லாகத்திருந்திய ஆனந்தஞ் செந்நெறி நண்ணிப்பொருந்து புவனங்கள் போற்றிசெய் தேத்தவருந்த விருந்தனள் மங்கைநல் லாளே.

மங்கையு மாரனுந் தம்மொடு கூடிநின்றங்குலி கூட்டி யகம்புறம் பார்த்தனர்கொங்கைநல் லாளுங் குமாரர்க ளைவரும்தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே.

சடங்கது செய்து தவம்புரி வார்கள்கடந்தனி லுள்ளே கருதுவ ராகில்தொடர்ந்தெழு சோதி துளைவழி யேறிஅடங்கிடு மன்பின தாயிழை பாலே.

பாலித் திருக்கும் பனிமல ராறினும்ஆலித் திருக்கு மவற்றி னகம்படிசீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்மூலத்து மேலது முத்துஅது வாமே.

முத்து வணத்தி முகந்தொறு முக்கண்ணிசத்தி சதிரி சகளி சடாதரிபத்துக் கரத்தி பராபரன் பைந்தொடிவித்தகி யென்னுள்ள மேவிநின் றாளே.

மேவிய மண்டல மூன்றுடன் கீழெரிதாவிய நற்பதத் தண்மதி யங்கதிர்மூவருங் கூடி முதல்வியாய் முன்நிற்பார்ஓவினு மேவிடு முள்ளொளி யாமே.

உள்ளொளி மூவிரண் டோங்கிய வங்கங்கள்வெள்ளொளி யங்கியின் மேவி யவரொடுங்கள்ளவிழ் கோனைக் கலந்துட னேநிற்கும்கொள்ள விசுத்திக் கொடியமு தாமே.

கொடியதி ரேகை குறியுள் இருப்பப்படியது வாருணைப் பைங்கழ லீசன்வடிவது வானந்தம் வந்து முறையேஇடுமுத லாறங்க மேந்திழை யாளே.

ஏந்திழை யாளு மிறைவர்கள் மூவரும்காந்தார மாறுங் கலைமுத லீரெட்டும்ஆந்த குளத்தியு மந்திர ராயுவுஞ்சார்ந்தன ரேத்த விருந்தனள் சத்தியே.

சத்தியென் பாளொரு சாதகப் பெண்பிள்ளைமுத்திக்கு நாயகி யென்ப தறிகிலர்பத்தியைப் பாழி லுகுத்தஅப் பாவிகள்கத்திய நாய்போல் கதறுகின் றாரே.

ஆரே திருவின் திருவடி காண்பர்கள்நேரே நின்றோதி நினையவும் வல்லார்க்குக்காரேர் குழலி கமல மலரன்னசீரேயுஞ் சேவடி சிந்தைவைத் தாளே.

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்துமுந்தையில் வைத்துத் தம்மூலத்தி லேவைத்துநிந்தையில் வையா நினைவதி லேவைத்துச்சந்தியில் வைத்துச் சமாதிசெய் வீரே.

சமாதிசெய் வார்கட்குத் தான்முத லாகிச்சிவாதியி லாருஞ் சிலைநுத லாளைநவாதியி லாக நயந்தது வோதில்உவாதி யவளுக் குறைவில தாமே.

உறைபதி தோறும் முறைமுறை மேவிநறைகமழ் கோதையை நாடொறு நண்ணிமறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்இறைதினைப் போதிடி லெய்திட லாமே.

எய்திட லாகு மிருவினை யின்பயன்கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னிமைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடுகைதவ மின்றி கருத்துறும் வாறே.

கருத்துறுங் காலம் கருது மனமும்திருத்தி யிருந்தவை சேரு நிலத்துஒருத்தியை யுன்னி யுணர்ந்திடு மண்மேல்இருத்திடு மெண்குண மெய்தலு மாமே.

ஆமையொன் றேறி யகம்படி யானெனஓமென்று வோதியெம் முள்ளொளி யாய்நிற்கும்தாம நறுங்குழற் றையலைக் கண்டபின்சோம நறுமலர் சூடிநின் றாளே.

சூடிடு மங்குச பாசத் துளைவழிகூடு மிருவளை கோலக்கைக் குண்டிகைநாடு மிருபத நன்னெடு ருத்திரம்ஆடிடு சீர்புனை யாடக மாமே.

ஆமயன் மாலர னீசன் சதாசிவன்தாமடி சூடிநின் றெய்தினர் தம்பதங்காமனுஞ் சாம னிரவி கனலுடன்சோமனும் வந்தடி சூடநின் றாளே.

சூடு மிளம்பிறை சூலி கபாலினிநீடு மிளங்கொடி நின்மலி நேரிழைநாடி நடுவிடை ஞான முருவநின்றாடு மதன்வழி யண்ட முதல்வியே.

அண்ட முதலாய் அவனி பரியந்தங்கண்டதொன் றில்லை கனங்குழை யல்லதுகண்டனுங் கண்டியு மாகிய காரணங்குண்டிகை கோளிகை கண்டத னாலே.

ஆலமுண் டானமு தாங்கவர் தம்பதஞ்சாலவந் தெய்துந் தவத்தின்பந் தான்வருங்கோலிவந் தெய்துங் குவிந்த பதவையோடேலவந்து ஈண்டி யிருந்தனள் மேலே.

மேலா மருந்தவ மேன்மேலும் வந்தெய்தக்காலால் வருந்திக் கழிவர் கணத்திடைநாலா நளினநின் றேத்திநட் டுச்சிதன்மேலா மெழுத்தின ளாமத்தி னாளே.

ஆமத் தினிதிருந் தன்ன மயத்தினள்ஓமத்தி லேயு மொருத்தி பொருந்தினள்நாம நமசிவ யென்று இருப்பார்க்குநேமத் துணைவி நிலாவிநின் றாளே.

நிலாமய மாகிய நீள்படி கத்தின்சிலாமய மாகுஞ் செழுந்தர ளத்தின்சுலாமய மாகுஞ் சுரிகுழற் கோதைகலாமய மாகக் கலந்துநின் றாளே.

கலந்துநின் றாள்கன்னி காதல னோடுங்கலந்துநின் றாளுயிர் கற்பன வெல்லாங்கலந்துநின் றாள்கலை ஞானங்க ளெல்லாம்கலந்துநின் றாள்கன்னி காலமு மாமே.

காலவி யெங்குங் கருத்து மருத்தியுங்கூலவி யொன்றாகுங் கூட லிழைத்தனள்மாலினி மாகுலி மந்திர சண்டிகைபாலினி பாலவன் பாகம தாமே.

பாகம் பராசத்தி பைம்பொற் சடைமுடிஏக மிருதய மீரைந்து திண்புயம்மோக முகமைந்து முக்கண் முகந்தொறும்நாக முரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே.

நாதனும் நாலொன் பதின்மருங் கூடிநின்றோதிடுங் கூட்டங்க ளோரைந் துளஅவைவேதனு மீரொன் பதின்மரு மேவிநின்றாதியு மந்தமு மாகிநின் றாளே.

ஆகின்ற நாள்கலை ஐம்பத் தொருவர்கள்ஆகிநின் றார்களி லாருயி ராமவள்ஆகிநின் றாளுட னாகிய சக்கரத்தாகிநின் றானவ னாயிழை பாடே.

ஆயிழை யாளொடு மாதிப் பரமிடம்ஆயதோ ரண்டவை யாறு மிரண்டுளஆய மனந்தோ றறுமுக மவைதனில்ஏயவார் குழலி யினிதுநின் றாளே.

நின்றனள் நேரிழை யோடுட னேர்படஇன்றெ னகம்படி யேழு முயிர்ப்பெய்துந்துன்றிய வோரொன் பதின்மருஞ் சூழலுள்ஒன்றுயர் வோதி யுணர்ந்துநின் றாளே.

உணர்ந்தெழு மந்திர மோமெனு முள்ளேமணந்தெழு மாங்கதி யாதிய தாகுங்குணந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே.

ஆமது அங்கியு மாதியு மீசனும்மாமது மண்டல மாருத மாதியும்ஏமது சீவன் சிகையங் கிருண்டிடக்கோமலர்க் கோதையுங் கோதண்ட மாகுமே.

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணிஆகிய வைம்ப துடனே யடங்கிடும்ஆகும் பராபரை யோடப் பரையவள்ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே.

தானிகழ் மோகினி சார்வான யோகினிபோன மயமுடை யாரடி போற்றுவர்ஆனவ ராவியி னாகிய அச்சிவத்தானாம் பரசிவ மேலது தானே.

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்ஆனந்த மோகினி யம்பொற் றிருவொடுமோனையில் வைத்து மொழிதரு கூறதுஆனவை யோமெனு மவ்வுயிர் மார்க்கமே.

மார்க்கங்க ளீன்ற மனோன்மணி மங்கலியார்க்கு மறிய அரியா ளவளாகும்வாக்கும் மனமும் மருவியொன் றாய்விட்டநோக்கும் பெருமைக்கு நுண்ணறி வாகுமே.

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்பின்னறி வாகும் பிரானறி வாற்றடஞ்செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

சன்மார்க்க மாகுஞ் சமைதரு மார்க்கமுந்துன்மார்க்க மானவை யெல்லாந் துரந்திடும்நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதுஞ்சன்மார்க்க தேவியுஞ் சத்தியென் பாளே.

சத்தியு நானுஞ் சயம்புவு மல்லதுமுத்தியை யாரும் முதலறி வாரில்லைஅத்திமேல் வித்திடி லத்தி பழுத்தக்கால்மத்தியி லேற வழியது வாமே.

அதுவிது வென்றவ மேகழி யாதேமதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்பதிமது மேவிப் பணியவல் லார்க்குவிதிவழி தன்னையும் வென்றிட லாமே.

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தைவென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே.

ஓரைம் பதின்மருள் ஒன்றியே நின்றதுபாரம் பரியத்து வந்த பரமிதுமாரங் குழலாளு மப்பதி தானுமுன்சாரும் பதமிது சத்திய மாமே.

சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்வித்தது வின்றியே யெல்லாம் விளைந்தனஅத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்சித்துஅது மேவித் திருந்திடு வாரே.

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்தஅருந்திட அவ்விட மாரமு தாகஇருந்தனள் தானங் கிளம்பிறை யென்றே.

என்று மெழுகின்ற ஏரினை யெய்தினார்அன்றது வாகுவர் தாழ்குழ லாளொடுமன்றரு கங்கை மதியொடு மாதவர்துன்றிய தாரகை சோதிநின் றாளே.

நின்றனள் நேரிழை யாளொடு நேர்படஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்ததுசென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டியதுன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறிஈன்றிடு மாங்கவ ளெய்திய பல்கலைமான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

ஆயு மறிவுங் கடந்தணு வாரணிமாயம தாகி மதோமகி யாயிடுஞ்சேய அரிவை சிவானந்த சுந்தரிநேயமது ஆய்நெறி யாகிநின் றாளே.

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.

ஆமயன் மாலர னீசன்மா லாங்கதிஓமய மாகிய வொன்பது மொன்றிடத்தேமய னாளுந் தெனாதென வென்றிடும்மாமய மானது வந்தெய்த லாமே.

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்இந்து முதலாக எண்டிசை யோர்களுங்கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்பயிற்று முலகினிற் பார்ப்பதி பூசைஅவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

தாங்கி யுலகிற் தரித்த பராபரன்ஓங்கிய காலத் தொருவ னுலப்பிலிபூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்றுபாங்குட னேற்பப் பராசத்தி போற்றே.

பொற்கொடி மாதர் புனைகழ லேத்துவர்அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடைவிற்கொடி மாதை விரும்பி விளங்கே.

விளங்கொளி யாய விரிசுடர் மாலைதுளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்களங்கொள் மணியுடன் காம வினோதம்உளங்கொ ளிலம்பிய மொன்று தொடரே.

தொடங்கி யுலகினிற் சோதி மணாளன்அடங்கி இருப்பதெ னன்பின் பெருமைவிடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கைஒடுங்கி உமையொடு மோருரு வாமே.

உருவம் பலவுயி ராய்வல்ல நந்திதெருவம் புகுந்தமை தேர்வுற நாடிப்புரிவளைக் கைச்சியெம் பொன்னணி மாதைமருவி யிறைவன் மகிழ்வன மாயமே.

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்தாயம் புணர்க்குஞ் சலந்தீ யமலனைக்காயம் புணர்க்குங் கலவியுள் மாசத்திஆயம் புணர்க்குமவ் வியோனியு மாமே.

உணர்ந்தொழிந் தேனுவ னாமெங்க ளீசன்புணர்ந்தொழிந் தேன்புவ னாபதி யாரைஅணைந்தொழிந் தேனெங்க ளாதிதன் பாதம்பிணைந்தொழிந் தேன்தன் னருள்பெற்ற வாறே.

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணிநற்றா ளிறைவனே நற்பய னேயென்பர்கற்றா னறியுங் கருத்தறி வார்கட்குப்பொற்றா ளுலகம் புகல்தனி யாமே.

தனிநாய கன்றனோ டென்னெஞ்ச நாடிஇனியா ரிருப்பிட மேழுல கென்பர்பனியான் மலர்ந்தபைம் போதுகை யேந்திக்கனியா நினைவதென் காரண மம்மையே.

அம்மனை யம்மை யரிவை மனோன்மணிசெம்மனை செய்து திருமங்கை யாய்நிற்கும்இம்மனை செய்த விருநில மங்கையும்அம்மனை யாகி யமர்ந்துநின் றாளே.

அம்மையு மத்தனு மன்புற்ற தல்லதுஅம்மையு மத்தனு மாரறிவா ரென்னைஅம்மையொ டத்தனும் யானு முடனிருந்தம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1155

1 / 100

0:000:00
8. ஆதார ஆதேயம்பாடல் 1155

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com