திருமூலர் அருளிய திருமந்திரம்
9. ஏரொளிச் சக்கரம்

நான்காம் தந்திரம் பாடல் 1255–1290 (36 பாடல்கள்)

ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ்ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம்ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின்ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.

வன்னி யெழுத்தவை மாபல முள்ளனவன்னி யெழுத்தவை வானுற வோங்கினவன்னி யெழுத்தவை மாபெருஞ் சக்கரம்வன்னி யெழுத்திடு மாறது சொல்லுமே.

சொல்லிய விந்துவு மீராறு நாதமாஞ்சொல்லிடு மப்பதி யவ்வெழுத் தாவனசொல்லிடு நூறொடு நாற்பத்து நாலுருச்சொல்லிடு சக்கர மாய்வரு மேலதே.

மேல்வரும் விந்துவு மவ்வெழுத் தாய்விடும்மேல்வரும் நாதமு மோங்கு மெழுத்துடன்மேல்வரும் அப்பதி யவ்வெழுத் தேவரின்மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே.

ஞாலம தாக விரிந்தது சக்கரம்ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்ஞாலம தாயிடு மப்பதி யோசனைஞாலம தாக விரிந்தது எழுத்தே.

விரிந்த வெழுத்தது விந்துவும் நாதமும்விரிந்த வெழுத்தது சக்கர மாகவிரிந்த வெழுத்தது மேல்வரும் பூமிவிரிந்த வெழுத்தினி லப்புற மப்பே.

அப்பது வாக விரிந்தது சக்கரம்அப்பினி லப்புற மவ்வன லாயிடும்அப்பினி லப்புற மாருத மாயெழஅப்பினி லப்புற மாகாச மாமே.

ஆகாச வக்கர மாவது சொல்லிடில்ஆகாச வக்கரத் துள்ளே யெழுத்தவைஆகாச வவ்வெழுத் தாகிச் சிவானந்தம்ஆகாச வக்கர மாவ தறிமினே.

அறிந்திடும் சக்கர மையைந்து விந்துஅறிந்திடும் சக்கரம் நாத முதலாஅறிந்திடும் அவ்வெழுத் தப்பதி யோர்க்கும்அறிந்திடும் அப்பக லோனிலை யாமே.

அம்முத லாறுமவ் வாதி யெழுத்தாகும்அம்முத லாறுமவ் வம்மை யெழுத்தாகும்இம்முதல் நாலு மிருந்திடு வன்னியேஇம்முத லாகு மெழுத்தவை யெல்லாம்.

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்எழுத்தவை யாறது வந்நடு வன்னிஎழுத்தவை யந்நடு வச்சுட ராகிஎழுத்தவை தான்முத லந்தமு மாமே.

அந்தமு மீறு முதலா னவையறஅந்தமு மப்பதி னெட்டுட னாதலால்அந்தமு மப்பதின் மூன்றி லமர்ந்தபின்அந்தமு மிந்துகை யாருட மானதே.

ஆவின மானவை முந்நூற் றறுபதும்ஆவின மப்பதி னைந்தின மாயுறும்ஆவின மப்பதி னெட்டுட னாயுறும்ஆவின மக்கதி ரோன்வர வந்தே.

வந்திடு மாகாச மாறது நாழிகைவந்திடு மக்கர முப்பதி ராசியும்வந்திடு நாளது முந்நூற் றறுபதும்வந்திடு மாண்டு வகுத்துரை யவ்வியே.

அவ்வின மூன்றுமவ் வாடது வாய்வரும்எவ்வின மூன்றுங் கிளர்தரு வேறதாஞ்சவ்வின மூன்றுந் தழைத்திடு தண்டதாம்இவ்வின மூன்று மிராசிக ளெல்லாம்.

இராசியுட் சக்கர மெங்கும் நிறைந்தபின்இராசியுட் சக்கர மென்றறி விந்துவாம்இராசியுட் சக்கரம் நாதமு மொத்தபின்இராசியுட் சக்கரம் நின்றிடு மாறே.

நின்றிடும் விந்துவென் றுள்ள வெழுத்தெல்லாம்நின்றிடும் நாதமு மோங்கு மெழுத்துடன்நின்றிடு மப்பதி யவ்வெழுத் தேவரின்நின்றிடு மப்புறந் தாரகை யானதே.

தாரகை யாகச் சமைந்தது சக்கரந்தாரகை மேலோர் தழைத்தது பேரொளிதாரகை சந்திர னற்பக லோன்வரத்தாரகை தாரகை தாரகை கண்டதே.

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாங்கண்டிடு நாதமுந் தன்மே லெழுந்திடக்கண்டிடு வன்னிக் கொழுந்தன லொத்தபின்கண்டிடு மப்புறங் காரொளி யானதே.

காரொளி யண்டம் பொதிந்த துலகெங்கும்பாரொளி நீரொளி சாரொளி காலொளிவானொளி யொக்க வளர்ந்து கிடந்துபின்நேரொளி யொன்றாய் நிறைந்தங்கு நின்றதே.

நின்றது வண்டமு நீளும் புவியெலாம்நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிடநின்றவிவ் வண்டமு மூல மலமொக்கும்நின்றவிவ் வண்டம் பலமது விந்துவே.

விந்துவு நாதமு மொக்க விழுந்திடில்விந்துவு நாதமு மொக்க விரையதாம்விந்திற் குறைந்திடு நாத மெழுந்திடில்விந்துவை யெண்மடி கொண்டது வீசமே.

வீச மிரண்டுள நாதத் தெழுவனவீசமு மொன்று விரைந்திடு மேலுறவீசமும் நாதமு மெழுந்துட னொத்தபின்வீசமும் விந்து விரிந்தது காணுமே.

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்விரிந்தது விந்துவும் நாதத் தளவினில்விரிந்தது வுட்கட்ட மெட்டெட்டு மாகில்விரிந்தது விந்து விரையது வாமே.

விரையது விந்து விளைந்தன வெல்லாம்விரையது விந்து விளைந்த வுயிரும்விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்விரையது விந்து விளைந்தவன் றானே.

விளைந்த வெழுத்தது விந்துவும் நாதம்விளைந்த வெழுத்தது சக்கர மாகவிளைந்த வெழுத்தவை மெய்யினு ணிற்கும்விளைந்த வெழுத்தவை மந்திர மாமே.

மந்திர சக்கர மானவை சொல்லிடிற்தந்திரத் துள்ளெழுத் தொன்றெரி வட்டமாதந்திரத் துள்ளு மிரேகையி லொன்றில்லைபந்தமு மாகும் பிரணவ முன்னிடே.

உன்னிட்ட வட்டத்தி லொத்தெழு மந்திரம்பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லைதன்னிட் டெழுந்த தகைப்பறப் பின்னிற்கப்பன்னிட்ட மந்திரம் பார்க்கலு மாமே.

பார்க்கலு மாகும் பகையறு சக்கரங்காக்கலு மாகுங் கருத்திற் றடமெங்கும்நோக்கலு மாகு நுணுக்கற்ற நுண்பொருள்ஆக்கலு மாகு மறிந்துகொள் வார்க்கே.

அறிந்திடும் சக்கர மாதி யெழுத்துவிரிந்திடும் சக்கர மேலெழுத் தம்மைபரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்குவிந்திடும் சக்கரம் கூறலு மாமே.

கூறிய சக்கரத் துள்ளெழு மந்திரம்மாறியல் பாக வமைந்து விரிந்திடுந்தேறிய வஞ்சுடன் சேர்ந்தெழு மாரணமாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே.

மதித்திடு மம்மையு மாமாது மாகும்மதித்திடு மம்மையு மங்கன லொக்கும்மதித்தங் கெழுந்தவை காரண மாகில்கொதித்தங் கெழுந்தவை கூடகி லாவே.

கூடிய தம்பன மாரணம் வசியமாடியல் பாக வமைந்து செறிந்திடும்பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்தேடியுள் ளாகத் தெளிந்துகொள் வார்க்கே.

தெளிந்திடும் சக்கர மூலத்தி னுள்ளேயளிந்த வகாரத்தை யந்நடு வாக்கிக்குளிர்ந்த வரவினைக் கூடியுள் வைத்துவளிந்தவை யங்கெழு நாடிய காலே.

காலரை முக்கால் முழுதெனும் மந்திரம்ஆலித் தெழுந்தமைந் தூறி யெழுந்ததாய்ப்பாலித் தெழுந்து பகையற நின்றபின்மாலுற்ற மந்திர மாறிக்கொள் வார்க்கே.

கொண்டவிம் மந்திரங் கூத்த னெழுத்ததாய்ப்பண்டையுன் னாவிப் பகையற விண்டபின்மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்இன்று மிதயத் தெழுந்து நமவெனே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #1255

1 / 36

0:000:00
9. ஏரொளிச் சக்கரம்பாடல் 1255

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com