அளந்தே னகலிடத் தந்தமு மீறும்அளந்தே னகலிடத் தாதிப் பிரானைஅளந்தே னகலிடத் தாணொடு பெண்ணும்அளந்தே னவனரு ளாய்ந்துணர்ந் தேனே.
உணர்ந்தில ரீசனை யூழிசெய் சக்திபுணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னிகொணர்ந்த வழிகொண்டு கும்பக மாமே.
கும்பக் களிறைந்துங் கோலொடு பாகனும்வம்பிற் றிகழு மணிமுடி வண்ணனும்இன்பக் கலவி யினிதுறை தையலும்அன்பிற் கலவியு ளாயொழிந் தாரே.
இன்பக் கலவியி லிட்டெழு கின்றதோர்அன்பிற் புகவல்ல னாமெங்க ளப்பனுந்துன்பக் குழம்பிற் துயருறு பாசத்துள்என்பிற் பராசக்தி யென்னம்மை தானே.
என்னம்மை யென்னப்ப னென்னுஞ் செருக்கற்றுஉன்னம்மை யூழித் தலைவனு மங்குளன்மன்னம்மை யாகி மருவி யுரைசெய்யும்பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே.
தார்மே லுறைகின்ற தண்மலர் நான்முகன்பார்மே லிருப்ப தொருநூறு தானுளபூமே லுறைகின்ற போதகம் வந்தனள்நாமே லுறைகின்ற நாயகி ஆணையே.
ஆணைய மாயருந் தாதுள் ளிருந்தவர்மாணைய மாய மனத்தை யொருக்கிப்பின்பாணைய மாய பரத்தை யறிந்தபின்தாணைய மாயதன் னாதனத் தானே.
தானே யெழுந்தஇத் தத்துவ நாயகிவானே ரெழுந்து மதியை விளக்கினள்தேனே ரெழுகின்ற தீபத் தொளியுடன்மானே நடமுடை மன்றுஅறி யீரே.
அறிவான மாயையு மைம்புலக் கூட்டத்துஅறிவான மங்கை அருளது சேரிற்பிரியா வறிவறி வாருள்ளம் பேணும்நெறிவாய சித்த நினைந்திருந் தாளே.
இரவும் பகலு மிலாத விடத்தேகுரவஞ்செய் கின்ற குழலியை நாடிஅரவம்செய் யாம லருளுடன் தூங்கப்பருவம்செய் யாததோர் பாலனு மாமே.
பாலனு மாகும் பராசத்தி தன்னொடுமேலணு காவிந்து நாதங்கள் விட்டிடமூலம தாமெனு முத்திக்கு நேர்படச்சாலவு மாய்நின்ற தற்பரத் தாளே.
நின்ற பராசக்தி நீள்பரன் தன்னொடுநின்றறி ஞானமு மிச்சையு மாய்நிற்கும்நன்றறி யுங்கிரி யாசக்தி நண்ணவேமற்றன வற்றுள் மருவிடுந் தானே.
மருவொத்த மங்கையுந் தானு முடனேஉருவொத்து நின்றமை யொன்று முணரார்கருவொத்து நின்று கலக்கின்ற போதுதிருவொத்த சிந்தைவைத் தெந்தைநின் றானே.
சிந்தையி னுள்ளே திரியுஞ் சிவசத்திவிந்துவும் நாதமு மாயே விரிந்தனள்சந்திர பூமி சடாதரி சாத்தவிஅந்தமொ டாதியதாம் வண்ணத் தாளே.
ஆறி யிருந்த அமுத பயோதரிமாறி யிருந்த வழியறி வாரில்லைதேறி யிருந்துநற் றீபத் தொளியுடன்ஊறி யிருந்தன ளுள்ளுடை யார்க்கே.
உடையவ னங்கி யுருத்திர சோதிவிடையவ னேறி விளங்கி யிருக்கும்கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்தடையது வாகிய சாதகர் தாமே.
தாமே லுறைவிட மாறித ழானதுபார்மே லிதழ்பதி னெட்டிரு நூறுளபூமே லுறைகின்ற புண்ணியம் வந்தனள்பார்மே லுறைகின்ற பைங்கொடி யாளே.
பைங்கொடி யாளும் பரம னிருந்திடந்திண்கொடி யாகத் திகழ்தரு சோதியாம்விண்கொடி யாக விளங்கி வருதலால்பெண்கொடி யாக நடந்தது உலகே.
நடந்தது அம்மலர் நாலுட னஞ்சாய்இருந்தனர் கன்னிக ளெட்டுட னொன்றாய்ப்படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளேதொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே.
அடுக்குந் தாமரை யாதி யிருப்பிடம்எடுக்கும் தாமரை யில்லகத் துள்ளதுமடுக்கும் தாமரை மத்தகத் தேசெலமுடுக்கும் தாமரை முச்சது ரத்தே.
முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்எச்சது ரத்து மிடம்பெற வோடிடக்கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெறஎச்சது ரத்து மிருந்தனள் தானே.
இருந்தனள் தன்முக மாறொடு நாலாய்ப்பரந்தனள் வாயுத் திசைதிசை தோறுங்குவிந்தன முத்தின் முகவொளி நோக்கிநடந்தது தேற லதோமுக மம்பே.
அம்பன்ன கண்ணி யரிவை மனோன்மணிகொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவியசெம்பொன்செ யாக்கை செறிகமழ் நாடொறும்நம்பனை நோக்கி நவிலுகின் றாளே.
நவிலும் பெருந்தெய்வம் நான்மறை சத்திதுகிலுடை யாடை நிலம்பொதி பாதம்அகிலமு மண்ட முழுதுஞ்செம் மாந்துபுகலும்முச் சோதி புனையநிற் பாளே.
புனையவல் லாள்புவ னத்திர யங்கள்வனையவல் லாளண்ட கோடிக ளுள்ளேபுனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்புனையவல் லாளையும் போற்றியென் பேனே.
போற்றியென் றாள்புவ னாபதி யம்மையென்ஆற்றலுள் நிற்கு மருந்தவப் பெண்பிள்ளைசீற்றங் கடிந்த திருநுதற் சேயிழைகூற்றந் துரக்கின்ற கொள்பைந் தொடியே.
தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரிவடிவார் திரிபுரை யாமங்கை சங்கைச்செடியார் வினைகெடச் சேர்வரை யேன்றேன்றடியார் வினைகெடுத் தாதியு மாமே.
மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடிபல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடிபுல்லிசைப் பாவையைப் போதத் துரந்திட்டுவல்லிசைப் பாவை மனம்புகுந் தாளே.
தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறைபாவித்து உலகம் படைக்கின்ற காலத்துமேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்துஆவிக்கும் அப்பொருள் தானது தானே.
அதுஇது வென்பா ரவளை யறியார்கதிவர நின்றதோர் காரணங் காணார்மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கைதிதமது வுன்னார்கள் தேர்ந்தறி யாரே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1125
1 / 30




