நவாக்கிரி சக்கரம் நானுரை செய்யில்நவாக்கிரி யொன்று நவாக்கிரி யாகநவாக்கிரி யெண்பத் தொருவகை யாகநவாக்கிரி யாகக்கிலீஞ் சௌம் முதலீறே.
சௌம் முதல் வெளவொடு ஹெளவுளுமீறிக்கௌவுளு மையுளுங் கலந்தி றீசிறீயென்றொவ்வி லெழுங்கிலீ மந்திர பாதமாச்செவ்வி லெழுந்து சிவாய நமவென்னே.
நவாக்கிரி யாவது நானறி வித்தைநவாக்கிரி யுள்ளெழும் நன்மைக ளெல்லாம்நவாக்கிரி மந்திரம் நாவுள்ளே யோதநவாக்கிரி சத்தி நலந்தருந் தானே.
நலந்தரு ஞானமுங் கல்வியு மெல்லாமுரந்தரு வல்வினை யும்மை விட்டோடிச்சிரந்தரு தீவினை செய்வ தகற்றிவரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.
கண்டிடுஞ் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடைகொண்டிடு முன்னே குறித்த வினைகளைவென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்குநின்றிடு சக்கரம் நினைக்கு மளவே.
நினைத்திடு மச்சிறீயிக் கிறீ யீராநினைத்திடு சக்கர மாதியு மீறுநினைத்திடு நெல்லொடு புல்வினை யுள்ளேநினைத்திடு மற்சனை நேர்தரு வாளே.
நேர்தரு மத்திரு நாயகி யானவள்யாதொரு வண்ண மறிந்திடும் பொற்பூவைகார்தரு வண்ணங் கருதின கைவரும்நாள்தரு வண்ணம் நடத்திடு நீயே.
நடந்திடும் பாரி னன்மைக ளெல்லாங்கடந்திடுங் காலனு மெண்ணிய நாளும்படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போலவடைந்திடு மவ்வண்ண மடைந்திடு நீயே.
அடைந்திடும் பொன்வெள்ளி கல்லுட னெல்லாமடைந்திடு மாதி யருளுந் திருவுமடைந்திடு மண்டத் தமரர்கள் வாழ்வுமடைந்திடு மவ்வண்ண மறிந்திடு நீயே.
அறிந்திடு வார்க ளமரர்க ளாகத்தெரிந்திடும் வானோருந் தேவர்கள் தேவன்பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடிமுரிந்திடு வானை முயன்றிடு நீயே.
நீர்தரு சக்கர நேர்தரு வண்ணங்கள்பார்மதி யும்மிறீ மன்சிறீ யீரானதாரணி யும்புகழ்த் தையல் நல்லாடன்னைக்காரணி யும்பொழிற் கண்டு கொள்ளீரே.
கண்டுகொ ழுந்தனி நாயகி தன்னையுமொண்டுகொ ழுமுக வசியம தாயிடும்பண்டுகொ ழும்பர மாய பரஞ்சுடர்நின்று கொளுநிலை பேறுடை யாளே.
பேறுடை யாடன் பெருமையை யெண்ணிடில்நாடுடை யார்களும் நம்வச மாயிடுமாறுடை யார்களும் வாழ்வது தன்னிலைக்கூறுடை யாளையுங் கூறுமின் னீரே.
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியைஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வெனமாறுமின் வையம் வரும்வழி தன்னையும்தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே
சேவடி சேரச் செறிய விருந்தவர்நாவடி யுள்ளே நவின்றுநின் றேத்துவர்பூவடி யிட்டுப் பொலிய விருந்தவர்மாவடி காணும் வகையறி வாரே.
ஐமுத லாக வலர்ந்தெழு சக்கரம்மைமுத லாக வலர்ந்தி றீயீராகுமைமுத லாகி யவற்குடை யாள்தன்னையைமுத லாக வளித்திடு நீயே.
அளித்திடு நாவுக் கரசிவள் தன்னைப்பழுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்தொகுத்தொரு நாவிடைச் சொல்ல வல்லாளைமுகத்துளு முன்னெழக் கண்டு கொளீரே.
கண்டவிச் சக்கர நாவிலெ ழுந்திடிற்கொண்டவிம் மந்திரங் கூத்தன் குறியதாமன்றினுள் வித்தையு மானிடர் கையதாம்வென்றிடும் வையக மெல்லியல் மேவியே.
மெல்லிய லாகிய மெய்ப்பொரு டாடன்னைச்சொல்லிய லாலே தொடர்ந்தங் கிருந்திடும்பல்லியல் பாகப் பரந்தெழு நாள்பலநல்லியல் பாக நடந்திடுந் தானே.
நடந்திடு நாவினினு ண்மைக ளெல்லாந்தொடர்ந்திடுஞ் சொல்லொடுஞ் சொற்பொரு டானுங்கடந்திடுங் கல்விக் கரசிவ னாகப்படர்ந்திடும் பாரிற் பகையில்லைத் தானே.
பகையில்லைக் கௌமுத லைந்து மேலாகுநகையில்லைச் சக்கர நன்றறி வார்க்குத்தொகையில்லைச் சொல்லிய பல்லுயி ரெல்லாம்வகையில்லை யாக வணங்கிடுந் தானே.
வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னைநலங்கிடு நல்லுயி ரானவை யெல்லாங்கலந்திடுங் காம வெகுளி மயக்கந்துலங்கிடுஞ் சொல்லிய சூழ்வினை தானே.
தானே கழறித் தறியவும் வல்லனாய்த்தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்தானே வணங்கித் தலைவனு மாமே.
ஆமே யனைத்துயி ராகிய வம்மையுந்தானே சகலமு மீன்றவத் தையலுமாமே யவனடி போற்றி வணங்கிடிற்போமே வினைகளாம் புண்ணிய னாகுமே.
புண்ணிய னாகிப் பொருந்தி யுலகெங்குங்கண்ணிய னாகிக் கலந்தங் கிருந்திடுந்தண்ணிய னாகித் தரணி முழுதுக்குமண்ணிய னாக வமர்ந்திருந் தானே.
தானது சும்மீறீக் கௌவது வீராநானது சக்கர நன்றறி வார்க்கெல்லாங்கானது கன்னி கலந்த பராசத்திகேளது வையங் கிளரொளி வானதே.
ஒளிக்கும் பராசத்தி யுள்ளே யமரிற்களிக்கு மிச்சிந்தை யுங்காரணங் காட்டித்தெளிக்கு மழையுடன் செல்வ முண்டாக்குமளிக்கு மிவளை யறிந்து கொள்வார்க்கே.
அறிந்திடுஞ் சக்கர மற்சனை யோடேயறிந்திடும் வையத்திடர் வகை காணில்மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யிற்பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.
புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்குகையில்லைக் கொல்வ திலாமை யினாலேவகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.
சேர்ந்தவ ரென்றுந் திசையொளி யானவர்காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்பாய்ந்தெழு முள்ளொளி பாரிற் பரந்ததுமாய்ந்தது காரிருள் மாறொளி தானே.
ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்களியது சக்கரங் கண்டறி வார்க்குத்தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்பளியது பஞ்சாக் கரமது வாமே.
ஆமே சதாசிவ நாயகி யானவளாமே யதோமுகத் துள்ளறி வானவளாமே சுவையொளி யூரோசை கொண்டவளாமே யனைத்துயிர் தன்னுளு மாமே.
தன்னுளு மாகித் தரணி முழுதுங்கொண்டென்னுளு மாகி யிடம்பெற நின்றவள்மன்னுளு நீரனல் காலுளும் வானுளுங்கண்ணுளு மெய்யுளுங் காணலு மாமே.
காணலு மாகுங் கலந்துயிர் செய்வனகாணலு மாகுங் கருத்து ளிருந்திடிற்காணலு மாகுங் கலந்து வழிசெய்யக்காணலு மாகுங் கருத்துற நில்லே.
நின்றிட மேழு புவனமு மொன்றாகக்கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
மெய்ப்பொருள் வௌமுதல் ஹௌவது வீறாகக்கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரந்தற்பொரு ளாகச் சமைந்தமு தேவரிநற்பொரு ளாக நடுவிருந் தாளே.
தாளதி னுள்ளே சமைந்தமு தேச்சுரிகாலது கொண்டு கருத்துற வீசிடில்நாளது நாளும் புதுமைகள் கண்டபின்கேளது காயமுங் கேடில்லைக் காணுமே.
கேடில்லைக் காணுங் கிளரொளி கண்டபினாடில்லைக் காணும் நாமுத லற்றபின்மாடில்லைக் காணும் வரும்வழி கண்டபின்காடில்லைக் காணுங் கருத்துற் றிடத்துக்கே.
உற்றிட மெல்லா முலப்பிலி பாழாகக்கற்றிட மெல்லாங் கடுவெளி யானதுமற்றிட மில்லை வழியில்லைத் தானில்லைச்சற்றிட மில்லைச் சலிப்பற நின்றிடே.
நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லாநின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்கநின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்நின்றிடு மேலை விளக்கொளி தானே.
விளக்கொளி சௌமுதல் வௌவது வீறாம்விளக்கொளி சக்கர மெய்ப்பொரு ளாகும்விளக்கொளி யாகிய மின்கொடி யாளைவிளக்கொளி யாக விளங்கிடு நீரே.
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லில்விளங்கிடு மெல்லிய லாளது வாகும்விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளைவிளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
தானே வெளியவ ளெங்கு நிறைந்தவள்தானே வெளிக்கும் வெளியது வானவள்தானே சகலமு மாக்கி யழித்தவள்தானே யனைத்துள வண்ட சகலமே.
அண்டத்தி னுள்ளே யளப்பரி தானவள்பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்குண்டத்தி னுள்ளே குணம்பல காணினுங்கண்டத்தி னின்ற கலப்பறி யார்களே.
கலப்பறி யார்கடல் சூழுல கெல்லாமுலப்பறி யாருட லோடுயிர் தன்னைசிலப்பறி யார்பல தேவரை நாடித்தலைப்பறி யாகச் சமைந்தவர் தாமே.
தானே யெழுந்தவச் சக்கரஞ் சொல்லிடில்மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்றேனே யிரேகை திகைப்பற வென்பதிற்றானே கலந்தறை யெண்பத் தோடொன்றே.
ஒன்றிய சக்கர மோதிடும் வேளையில்வெள்ளி கொள்மேனி மதிவட்டம் பொன்மையாங்கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்மன்றிய லம்மை யெழுத்தவை பச்சையே.
ஏய்ந்த மரவுரி தன்னி லெழுதிநீவாய்ந்த விப்பொன்னெண்பத் தொன்றி னிரைத்தபின்காய்ந்தவி நெய்யொட் கலந்துட னோமமுமாய்ந்த வியாயிர மாகுதி பண்ணே.
பண்ணிய பொன்னைப் பகைப்பற நீபிடியெண்ணிய நாள்களி லின்பமே யெய்திடுநண்ணிய நாமமு நான்முக னொத்திடுஞ்சொல்லிய லேறிற் சொக்கனு மாகுமே.
ஆகின்ற சந்தன குங்கும கத்தூரிபோகின்ற சாந்து சவாது புழுகுநெய்யாகின்ற கற்பூர மாகோசன நீருஞ்சேர்கின்ற வொன்பதுஞ் சேரநீ வைத்திடே.
வைத்திடும் பொன்னுடன் மாதவ னோக்கிடில்கச்சிரு கொங்கை கலந்தெழு கன்னியைத்தச்சது வாக சமைந்தவிம் மந்திரமச்சியல் பாக வாயிரஞ் சிந்தியே.
சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாயெந்தை கரங்க ளிருமூன்று முள்ளதுபந்தமாஞ் சூலப் படைபாசம் வில்லம்புமுந்தை கிலியெழ முன்னிருந் தாளே.
இருந்தன சத்தியறு பத்து நால்வர்யிருந்தனர் கன்னிக ளெண்வகை யெண்மரிருந்தனர் சூழ வெதிர் சக்கரமாயிருந்த கரமிரு வில்லம்பு கொண்டே.
கொண்ட கனகங் குழைமுடி யாடையாய்க்கண்டவிம் மூர்த்தங் கனல்திரு மேனியாய்ப்பண்டமர் சோதிப் படரித ழானவையுண்டங் கொருத்தி யுணர்ந்து கொள்வார்க்கே.
உணர்ந்திருந் துள்ளே யொருத்தியை நோக்கிற்கலந்திருந் தங்கே கருணை பொழியுமலர்ந்தெழு மோசை யொளியது காணுந்தளர்ந்தெழு சக்கரந் தான்றரு வாளே.
தரும் வழியாகிய தத்துவ ஞானங்குருவழி யாயங் குணங்களில் நின்றுகருவழி யாய கணக்கை யறுத்துப்பெருவழி யாகிய பேரொளி காணே.
பேரொளி யாய பெரிய மலர்நடுச்சீரொளி யாகத் திகழ்தரு னாயகித்தாரொளி யாயவள் தன்னிறம் பொன்மையாய்ப்பாரொளி யாகப் பரந்துநின் றாளே.
பரந்த கரமிரு பங்கய மேந்திக்குவிந்த கரமிரு கொய்த மாபாணிமலர்ந்தணி கொங்கைகள் முத்தார் பவளமிருந்தல் குலாடை மணிபொதிந் தன்றே.
மணிமுடி பாத சிலம்பணி மங்கையணிந்தவர்க் கன்றி யருளில்லை யாகுந்தணிந்தவர் நெஞ்சினுட் டன்னரு ளாகிப்பணிந்தவர்க் கன்றே பரகதி யாமே.
பரந்தி ருந்துள்ளே யறுப்பது சத்திகரந்தன கன்னிக ளப்படி சூழமலர்ந்திரு கையில் மலரவை யேந்திச்சிறந்தவ ரேத்துஞ் சிறீதன மாமே.
தனமது வாகிய தையலை நோக்கிமனமது வோடி மறிக்கிலோ ராண்டிற்கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்தினகர னாரிடச் செய்தி யதாமே.
ஆகின்ற மூலத் தெழுந்த முழுமலர்போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்போகின்ற பூரண மாக நிறைந்தபின்சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே.
ஆகின்ற மண்டலத் துள்ளே யமைந்தவளாகின்ற வத்தனி நாயகி யானவளாகின்ற வைம்பத் தறுசத்தி நேர்தருவாகின்ற வைம்பத் தறுவகை சூழவே.
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாயாங்கணி முத்த மழகிய மேனியுந்தாங்கிரு கையவை தார்கிளி ஞானமாயேந்து கரங்க ளெடுத்தமா பாசமே.
பாசம தாகிய வேரை யறுத்திட்டுநேசம தாக நினைந்திடு மும்முளேநாசம தெல்லா நடந்திடு மையாண்டிற்காசினி மேலமர் கண்ணுத லாகுமே.
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழிபண்ணுயர் நாதம் பகையற நின்றிடில்விண்ணமர் சோதி விளங்கிடி றீங்காரமண்ணுடை நாயகி மண்டல மாகுமே.
மண்டலத் துள்ளே மலர்ந்தெழு தீபத்தைக்கண்டகத் துள்ளே கருதி யிருந்திடும்விண்டகத் துள்ளே விளங்கி வருதலாற்றண்டகத் துள்ளவை தாங்கலு மாகுமே.
தாங்கிய நாவித் தடமலர் மண்டலத்தோங்கி யெழுங்கலைக் குள்ளுணர் வானவளேங்க வரும்பிறப் பெண்ணி யறுத்திடவாங்கிய னாதம் வலியுட னாகுமே.
நாவுக்கு நாயகி நன்மணிப் பூணாரம்பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாள்பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தளாவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.
அன்றிரு கையி லளந்த பொருண்முறையின்றிரு கையி லெடுத்த வெண்குண்டிகைமன்றது காணும் வழியது வாகவேகண்டங் கிருந்த வக்காரணி காணுமே.
காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்காரணி கன்னிக ளைம்பத் திருவராய்க்காரணி சக்கரத் துள்ளே கரந்தெங்குங்காரணி தன்னரு ளாகிநின் றாளே.
நின்ற விச்சத்தி நிலைபெற நின்றிடிற்கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்கொண்ட விரதநீர் குன்றாம னின்றிடின்மன்றினி லாடு மணியது காணுமே.
கண்டவிச் சத்தி யிருதய பங்கயங்கொண்டவித் தத்துவ நாயகி யானவள்பண்டையவ் வாயுப் பகையை யறுத்திடவின்றென் மனத்து ளினிதிருந் தாளே.
இருந்தவிச் சத்தி யிருநாலு கையிற்பரந்தவிப் பூக்கிளி பாச மழுவாழ்கரந்த கடகுடன் வில்லம்பு கொண்டங்குரந்தங் கிருந்தவன் கூத்துகந் தாளே.
உகந்தனள் பொன் முடிமுத் தாரமாகப்பரந்த பவளமும் பட்டாடை சாத்திமலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்துதழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.
பச்சை யிவளுக்குப் பாங்கிமா ராறெட்டுக்கொச்சைய ரெண்மர்கள் கூடி வருதலாற்கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்எச்ச விடைச்சி யினிதிருந் தாளே.
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்காலது வாகக் கலந்துகௌம் னைம்என்றுமாலது வாக வழிபாடு செய்துநீபாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
விண்ணமர் நாபி யிரதயமாங் கிடைக்கண்ணமர் கூபங் கலந்து வருதலாற்பண்ணமர்ந் தாதித்த மண்டல மானதுதண்ணமர் கூபந் தழைத்தது காணுமே.
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துளதாபத்துச் சத்தி தயங்கி வருதலாலாபத்துக் கைகள டைந்தன நாலைந்துபாசம றுக்கப் பரந்தன சூழவே.
சூலந்தண் டொள்வாள் சுடர்பரை ஞானமாய்வேலம்பு தமாக மாகிளி விற்கொண்டுகோலம்பு பாசம் மழுக்கத்தி கைக்கொண்டுகோலஞ்சேர் சங்கு குவிந்தகை யெண்ணதே.
எண்ணமர் சத்திகள் நாற்பத்தி னாலுடனெண்ணமர் சத்திகள் நாற்பத்தி னால்வராமெண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவளெண்ணிய வெண்ணங் கடந்துநின் றாளே.
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடுதொடர்ந்தணி முத்துப் பவளங் கச்சாகப்படர்ந்தல் குற்பட்டாடை பாதச் சிலம்புமடந்தை குமிறீயில் வந்துநின் றாளே.
நின்றவள் சத்தி நிறந்தரம் மாகவேகண்டிடு மேரு வணுவாதி தானாதிப்பண்டைய வாநின் பகட்டை யறுத்திடவொன்றிய தீபமுணர்ந் தாற்குண் டாகுமே.
உண்டாம தோமுக முத்தம மானதுகண்டவிச் சத்தி சதாசிவ நாயகிகொண்ட முகமைந்து கூறுங் கரங்களுமொன் றிரண்டாகவே மூன்றுநா லானதே.
நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்பன்மணி நாகமழுக் கத்தி பந்தாகுங்கன்மணி தாமரை கையிற் றமருகம்பொன்மணி பூணாரம் பூசனை யானதே.
பூசனை சத்திக ளெண்ணைவர் சூழவேநேசவள் கன்னிகள் நாற்பது நேரதாக்காசினி சக்கரத் துள்ளே கலந்தவள்மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே.
தாரதி னுள்ளே தயங்கிய சோதியைப்பாரதி னுள்ளே பரந்து ளெழுந்திடவேரதுவ் வொன்றி நின்றெண்ணு மனோமயங்காரது போலக் கலந்தெழு மண்ணிலே.
மண்ணி லெழுந்த வகார வுகாரங்கள்விண்ணி லெழுந்து சிவாய நமவென்றுதண்ணி லெழுந்தது காண்பரி தென்றுதான்கண்ணி லெழுந்தது காட்சிதர வென்றே.
என்றங் கிருந்த வமுதக் கலையிடைச்சென்றங் கிருந்த வமுதப் பயோதரிகண்ட கரமிரு வெள்ளிபொன் மண்டையாய்க்கொண்டங் கிருந்தது வண்ண வமுதமே.
அமுத மதாக வழகிய மேனிபடிக மதாகப் பரந்தெழு முள்ளேகுமுத மதாகக் குளிர்ந்தெழு முத்துக்கெழுத மதாகிய கேடிலி தானே.
கேடிலி சத்திகள் முப்பத் தறுவருநாடிலி கன்னிக ணாலொன் பதிமரும்பூவிலி பூவித ழுள்ளே யிருந்தவர்நாளிலி தன்னை நணுகிநின்றார் களே.
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்கண்டது சோதி கருத்து ளிருந்திடக்கொண்டது வோராண்டு கூடி வருகைக்குவிண்ட வௌகாரம் விளங்கின வென்றே.
விளங்கிடும் வானிடை நின்றவை யெல்லாம்வணங்கிடு மண்டல மன்னுயி ராகநலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.
ஆமே யதோமுக மேலே யமுதமாய்த்தானே யுகாரந் தழைத்தெழுஞ் சோமனுங்காமேல் வருகின்ற கற்பக மானதுபூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.
பொற்கொடி யாளுடன் பூசனை செய்திடவக்களி யாகிய வாங்காரம் போய்விடுமற்கடி யாகிய மண்டலந் தன்னுளேபிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.
பேதை யிவளுக்குப் பெண்மை யழகாகுந்தாதை யிவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்மாதை யிவளுக்கு மண்ணுந் திலதமாய்க்கோதையர் சூழக் குவிந்திடுங் காணுமே.
குவிந்தன சத்திகள் முப்பத் திருவர்நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்பரந்தித ழாகிய பங்கயத் துள்ளேயிருந்தனர் காணு மிடம்பல கொண்டே.
கொண்டங் கிருந்தனர் கூத்த னொழியினைக்கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளதுபண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமாமின்றென் மனத்துள்ளே யில்லடைந் தாளுமே.
இல்லடைந் தாளுக்கு மில்லாத தொன்றில்லையில்லடைந் தானுக் கிறப்பது தானில்லையில்லடைந் தானுக் கிமையவர் தானொவ்வர்ரில்லடைந் தானுக்கு மில்லாதில் லானையே.
ஆனை மயக்கு மறுபத்து நாற்றறியானை யிருக்கு மறுபத்து நாலொளியானை யிருக்கு மறுபத்து நாலறையானை யங்கோடு மறுபத்து நாலிலே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1319
1 / 100




