பணிந்தெண் திசையும் பரமனை நாடித்துணிந்தெண் திசையுந் தொழுதெம் பிரானைஅணிந்தெண் திசையினும் அட்டமா சித்திதணிந்தெண் திசைசென்று தாபித்த வாறே.
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்துரிசற நாடியே தூவெளி கண்டேன்அரிய தெனக்கில்லை அட்டமா சித்திபெரிதருள் செய்து பிறப்பறுத் தானே.
குரவன் அருளிற் குறிவழி மூலப்பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்தெரிதரு சாம்பவி கேசரி சேரப்பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.
காயாதி பூதங் கலைகால மாயையில்ஆயா தகல அறிவொன் றனாதியேஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்வீயாப் பரகாயம் மேவலு மாமே.
இருபதி னாயிரத் தெண்ணூறு பேதம்மருவிய கன்ம மாமந்த யோகந்தருமிவை காய உழைப்பாகுந் தானேஅருமிரு நான்காய் அட்டமா சித்திக்கே.
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்உதய மதுநா லொழியவோ ரெட்டுப்பதியும்ஈ ராறாண்டு பற்றறப் பார்க்கில்திதமான ஈராறு சித்திக ளாமே.
நாடும் பிணியாகு நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரைதாழான ஒன்பதிற் றான்பர காயமே
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்திசீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்ஏரொன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்மானாக் கனமும் பரகாயத் தேகமுந்தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லையாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்கோங்கி வரமுத்தி முந்திய வாறே.
முந்திய முந்நூற் றறுபது காலமும்வந்தது நாழிகை வான்முத லாயிடச்சிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலருந்தியுள் நின்று வுதித்தெழு மாறே.
சித்தந் திரிந்து சிவமய மாகியேமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்சித்தம் பரத்தில் திருநடத் தோரே.
ஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தனஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திடஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலில்இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்இருக்கு முடலி லிருந்தில வாகில்இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்வீங்கிய வாதமுங் கூனும் முடமதாய்வீங்கு வியாதிகள் கண்ணில் மருவியே.
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.
நாடியின் ஓசை நயனம் இருதயந்தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்தேவருள் ஈசன் திருமால் பிரமனும்ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே.
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்ஒன்பது நாடி ஒருங்கவல் லார்கட்குஒன்பது வாசல் உலைநல மாமே.
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழு னைச்செல்லவாங்கி இரவி மதிவழி ஓடிடத்தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திடஆங்கது சொன்னோம் அருள்வழி யோர்க்கே.
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடிவலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்விலைக்குண்ண வைத்ததோர் வித்தது வாமே.
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவர்நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்தேடிச்சென் றங்கே தேனை முகந்துண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பதுமட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்பொட்டிட்டு நின்றது பூரண மானதே.
பூரண சத்தி எழுமூன் றறையாகஏரணி கன்னியர் ஏழ்நூற்றஞ் சாயினர்நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்காரண மாகிக் கலந்து விரிந்ததே.
விரிந்து குவிந்து விளைந்தஇம் மங்கைகரந்துள் எழுந்து கரந்தங் கிருக்கிற்பரந்து குவிந்தது பார்முதற் பூதம்இரைந்தெழு வாயு விடத்தினில் ஒடுங்கே.
இடையொடு பிங்கலை என்னும் இரண்டுமடைபடு வாயுவு மாறியே நிற்குந்தடையவை யாறெழுந் தண்கட ருள்ளேமிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.
ஒடுங்கி ஒருங்கி யுணர்ந்தங் கிருக்கின்அடங்கி அடங்கிடும் வாயு வதனுள்மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளேநடங்கொண்ட கூத்தனும் நாடுகின் றானே.
நாடியின் உள்ளே நாதத் தொனியுடன்தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டுபாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டுமாடில் ஒருகை மணிவிளக் கானதே.
அணுமாதி சித்திக ளானவை கூறில்அணுவில் அணுவின் பெருமையில் நேர்மைஇணுகாத வேகார் பரகாய மேவல்அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானுவிட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்சத்தி அருள்தரத் தானுள வாகுமே.
எட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்இட்டம துள்ளே இருக்கல்பர காட்சிஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்தந்தின்றி நற்காமிய லோகஞ் சார்வாகும்அந்த வுலகம் அணிமாதி யாமே.
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்அணிந்த அணிமாகை தானாம் இவனுந்தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகிமெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.
ஆகின்ற வத்தனி நாயகி தன்னுடன்போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்சாகின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்தானொளி யாகித் தழைத்தங் கிருந்திடும்பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றதுமேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்போகின்ற காலங்கள் போவது மில்லையாம்மேனின்ற காலம் வெளியுற நின்றபின்தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.
தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்தன்வழி யாகத் தழைத்திடு வையகந்தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்தன்வழி தன்னரு ளாகிநின் றானே.
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை யெல்லாங்கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்மேகின்ற காலம் வெளியுற நின்றதுபோகின்ற காலங்கள் போவது மில்லையே.
போவதொன் றில்லை வருவது தானில்லைசாவதொன் றில்லை தழைப்பது தானில்லைதாமத மில்லை தமரகத் தின்னொளியாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்பறிந்தது பூதப் படையவை யெல்லாங்குவிந்தவை யோராண்டு கூட இருக்கில்விரிந்த பரகாய மேவலு மாமே.
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்மூல விளக்கொளி முன்னே யுடையவர்கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்குமேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்கண்டன பூதப் படையவை எல்லாங்கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்பண்டையவ் வீசன் தத்துவ மாகுமே.
ஆகின்ற சந்திரன் தன்னொளி யாயவன்ஆகின்ற சந்திரன் தட்பமு மாயிடும்ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்ஆகின்ற சந்திரன் தானவ னாமே.
தானே படைத்திட வல்லவ னாயிடுந்தானே யளித்திட வல்லவ னாயிடுந்தானே சங்காரத் தலைவனு மாயிடுந்தானே யிவனெனுந் தன்மைய னாமே.
தண்மைய தாகத் தழைத்த கலையினுள்பண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தைவன்மைய தாக மறித்திடில் ஓராண்டின்மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.
தன்மைய தாகத் தழைத்த பகலவன்மென்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்பொன்மைய தாகப் புலன்களும் போயிடநன்மைய தாகிய நற்கொடி காணுமே.
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டுபொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்கற்கொடி யாகிய காமுக னாமே.
காமரு தத்துவ மானது வந்தபின்பூமரு கந்தம் புவனம தாயிடும்மாமரு வுன்னிட மெய்திடு மானனாய்நாமரு வும்ஒளி நாயக மானதே.
நாயக மாகிய நல்லொளி கண்டபின்தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும்போயக மான புவனங்கள் கண்டபின்பேயக மாகிய பேரொளி காணுமே.
பேரொளி யாகிய பெரியஅவ் வேட்டையும்பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்தாரொளி யாகத் தரணி முழுதுமாம்ஓரொளி யாகிய காலொளி காணுமே.
காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்காலது அக்கொடி நாயகி தன்னுடன்காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையும்காலது வேமண்டிக் கொண்டஇவ் வாறே.
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்ஆறது ஆயிர முந்நூற் றொடைஞ்சுளஆறது வாயிர மாகு மருவழிஆறது வாக வளர்ப்ப திரண்டே.
இரண்டினின் மேலே சதாசிவ நாயகிஇரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்இரண்டது ஆயிரம் ஐம்பதொ டொன்றாய்த்திரண்டது காலம் எடுத்தது அஞ்சே.
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகிஅஞ்சுடன் அஞ்சது வாயுத மாவதுஅஞ்சது வன்றி இரண்டது வாயிரம்அஞ்சது காலம் எடுத்தருளும் ஒன்றே.
ஒன்றது வாகிய தத்துவ நாயகிஒன்றது கால்கொண்டு ஊர்வகை சொல்லிடில்ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்ஒன்றது காலம் எடுத்தருளும் முன்னே.
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்முன்னுறு வாயுவின் முடிவகை யாமே.
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்ஆய்வரும் ஐஞ்ஞூற்று முப்பதொ டொன்பதுஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.
இருநிதி யாகிய எந்தை யிடத்துஇருநிதி வாயு இயங்கு நெறியில்இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்எழுகின்ற வாயு இடமது சொல்லில்எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்எழுந்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிடஎட்டது கால்கொண் டிடவகை யொத்தபின்ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்துந்திச் சமாதி யுடையொளி யோகியே.
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்சிணுங்குற்ற வாயர்தம் சித்தி தாம்கேட்டல்நுணங்கற் றிருத்தல் கால்வேகம் நுந்தலே.
மரணஞ் சரைவிடல் வண்பர காயம்இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்அரணன் திருவுரு வாதன்மூ வேழாங்கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்துபாதங்கள் நோவ நடந்தும் பயனில்லைகாதலில் அண்ணலைக் காண இனியவர்நாதன் இருக்கின்ற நகரறி வாரே.
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்துசாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்பாலித்த சத்தி பரைபரன் பாதமே.
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்றுமீதான தற்பரை மேவும் பரனொடுமேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளிஓதா அசிந்தமீ தானந்த யோகமே.
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்பதியது காட்டும் பரமன்நின் றானே.
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டுநட்டறி வார்க்கு நமனில்லை தானேகட்டவல் லார்கள் கரந்தெங்குந் தானாவர்மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #640
1 / 72




