ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்சாக்குகின் றான்அவன் ஆதிஎம் ஆருயிர்ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்தாக்குகின் றான்அவன் ஆவது அறிந்தே.
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்பொறைநின்ற இன்னுயிர் போந்துறை நாடப்பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.
இன்புறு காலத் திருவர்முன் பூறியதுன்புறு பாசத் துயர்மனை வானுளன்பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்அன்புறு காலத்து அமைத்தொழிந் தானே.
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்புருடன் உடலில் பொருந்துமற் றோரார்திருவின் கருக்குழி தேடிப் புகுந்ததுருவம் இரண்டாய் ஓடி விழுந்ததே.
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனிஒழிந்த முதலைந்தும் ஈரைந்தோ டேறிப்பொழிந்து புனல்பூதம் போற்றுங் கரணம்ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே.
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவும்கூவியே அவிழுங் குறிக்கொண்ட போதே.
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டுடன் நாலு புரவியும்பாகன் விரட்டானெனிற் பன்றியு மாமே.
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்பேரொத்த மைந்தனும் பேரர சாளுமே.
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்பாயுங் கருவும் உருவா மெனப்பலகாயங் கலந்தது காணப் பதிந்தபின்மாயங் கலந்த மனோலய மானதே.
கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்டநிற்குந் துரியம் பேதித்து நினைவெழவற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே.
என்பால் மிடைந்து நரம்பு வரிகட்டிச்செம்பால் இறைச்சித் திருந்த மனைசெய்துஇன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்நண்பால் ஒருவனையே நாடுகின் றேனே.
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன்இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்துகுதஞ்செய்யும் அங்கியின் கோபம் தணிப்பான்விதஞ்செய்யும் மாறே விதித்தொழிந் தானே.
ஒழிபல செய்யும் வினையுற்ற நாளேவழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்பழிபல செய்கின்ற பாசக் கருவைச்சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்அக்கிர மத்தே தோன்றுமவ் வியோனியும்புக்கிடும் எண்விரல் புகுந்து நால்விரல்அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்கோசத்துள் ஆகம் கொணர்ந்த கொடைத்தொழில்ஓகத்துள் ஆங்கே இரண்டெட்டு மூன்றைந்துமோகத்துள் ஆங்குஒரு முட்டைசெய் தானே.
பிண்டத்தில் உள்ளுறு பேதைப் புலனைந்தும்பிண்டத்தி னூடே பிறந்து மரித்ததுஅண்டத்தின் உள்ளுறு சீவனும் அவ்வகைஅண்டத்து நாதத்தில் அமர்ந்திடுந் தானே.
இலைப்பொறி ஏற்றி எனதுடல் ஈசன்துலைப்பொறி யிற்கரு ஐந்துட னாட்டிநிலைப்பொறி முப்பது நீர்மை கொளுவிஉலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்துன்பக் கலசம் அணைவான் ஒருவனேஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டுவெந்தது சூளையில் விளைந்தது தானே.
அறியீர் உடம்பினி லாகிய ஆறும்பிறியீர் அதனிற் பெருகுங் குணங்கள்செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்டதறிவீர் ஐந்தினுள் ளானது பிண்டமே.
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்மடைவைத்த ஒன்பது வாய்தலம் வைத்துத்திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே.
கேட்டுநின் றேன்எங்குங் கேடில் பெருஞ்சுடர்மூட்டுகின் றான்முதல் யோனி மயமவன்கூட்டுகின் றான்குழம் பின்கரு வையுருநீட்டுகின் றான்ஆகத்து நேர்பட்ட வாறே.
பூவுடன் மொட்டுப் பொருந்த அலர்ந்தபின்காவுடைத் தீபங் கலந்து பிறந்திடும்நீரிடை நின்ற குமிழி நிழலதாய்ப்பாருடல் எங்கும் பரந்தெட்டும் பற்றுமே.
எட்டினுள் ஐந்தாகும் இந்திரி யங்களும்கட்டிய மூன்று கரணமு மாய்விடும்ஒட்டிய பாச உணர்வென்னும் காயப்பைக்கட்டி அவிழ்த்திடுங் கண்ணுதல் காணுமே.
கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடப்பண்ணுதல் செய்து பசுபாசம் நீக்கிடஎண்ணிய வேதம் இசைத்த பரப்பினைமண்முத லாகவே வகுத்துவைத் தானே.
அருளல்ல தில்லை அரனவன் அன்றிஅருளில்லை யாதலி னாலோர் உயிர்க்குத்தருகின்ற போதிரு கைத்தாயர் தம்பால்வருகின்ற நண்பு வகுத்திடுந் தானே.
வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்பகுத்துணர் வாகிய பல்வகை எங்கும்வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
மாண்பது வாக வளர்கின்ற வன்னியைக்காண்பது ஆண்பெண் அலியெனும் கற்பனைபூண்பது மாதா பிதாவழி போலவேஆம்பதி செய்தானச் சோதிதன் ஆண்மையே.
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும்பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம்பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகைபாய்ந்திடும் யோகியர்க்குப் பாய்ச்சலும் ஆமே.
பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும்பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும்பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும்பாய்கின்ற வாயுமா தர்க்கில்லை பார்க்கிலே.
மாதா உதரம் மலமிகின் மந்தனாம்மாதா உதரம் சலமிகின் மூங்கையாம்மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லைமாதா உதரத்தில் வந்த குழவிக்கே.
குழவியும் ஆணாம் வலத்தது வாகில்குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில்குழவி அலியாம் கொண்டகால் ஒக்கிலே.
கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில்கொண்ட குழவியும் கோமள மாயிடுங்கொண்ட வாயு இருவர்க்குங் குழறிடில்கொண்டதும் இல்லையாங் கோல்வளை யார்கட்கே.
கோல்வளை உந்தியிற் கொண்ட குழவியுந்தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்பால்வளர்ந் துள்ளே பகலவன் பொன்னுருப்போல்வளர்ந் துள்ளே பொருந்துஉரு வாமே.
உருவம் வளர்ந்திடும் ஒண்டிங்கள் பத்தில்பருவம தாகவே பாரினில் வந்துமருவி வளர்ந்திடும் மாயையி னாலேஅருவம தாவதிங் காரறி வாரே.
இட்டார் அறிந்திலர் ஏற்றவர் கண்டிலர்தட்டான் அறிந்தும் ஒருவர்க் குரைத்திலன்பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்குளன்கெட்டேன்இம் மாயையின் கீழ்மையைஇவ் வாறே.
இன்புற நாடி இருவருஞ் சந்தித்துத்துன்புறு பாசத்தில் தோன்றி வளர்ந்தபின்முன்புற நாடி நிலத்தின்முன் தோற்றியதொன்புற நாடிநின்று ஓதலு மாமே.
குயிற்குஞ்சு முட்டை காக்கைதன் கூட்டிட்டால்அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்இயக்கில்லை போக்கில்லை ஏனென்ப தில்லைமயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.
முதற்கிழங் காய்முளை யாய்அம் முளைப்பின்அதற்புத லாய்ப்பல மாய்நின் றளிக்கும்அதற்கது வாம்இன்ப மாவது போலஅதற்கது வாய்நிற்கும் ஆதிப் பிரானே.
ஏனோர் பெருமைய னாகினும் எம்இறைஊனேய் சிறுமையுள் உட்கலந் தாங்குளன்வானோர் அறியும் அளவல்ல மாதேவன்தானே அறியும் தவத்தினது உள்ளே.
பரத்திற் பதிந்து பதிந்தநற் காயம்உருத்தரித் திவ்வுடல் ஓங்கிட வேண்டில்திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்திரித்தும் பிறக்கும் திருவரு ளாலே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #451
1 / 41




