திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 459

இரண்டாம் தந்திரம்14. கர்ப்பக் கிரியை

தொடர்ந்து படிக்கread this section continuously

ஏயங் கலந்த இருவர்தஞ் சாயத்துப்பாயுங் கருவும் உருவா மெனப்பலகாயங் கலந்தது காணப் பதிந்தபின்மாயங் கலந்த மனோலய மானதே.

உரை

எத்தனையோ பிறவிகளை எடுத்து முடிந்தபின், இந்தப் பிறவியில் வினைப் பயனால் ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் கலக்கின்றனர். அவர்களது உருவங்களிலிருந்தும் அவர்களது முன்னோர்களின் உருவங்களிலிருந்தும் பலவிதமான அம்சங்களை எடுத்துக்கொண்டு, அந்த அம்சங்களின் சாயலிலேயே உருவம் கொண்டு கரு உருவாகின்றது. ஆணும் பெண்ணும் இன்பத்தில் கலந்தபின் பெண்ணிடம் உருவான அந்தக் கரு புதிதாக உருவானதாக அனைவராலும் அறியப்பட்டாலும், அந்தக் கரு உருவாகுவதற்கு முன்பே இந்த ஆணுக்கும் இந்தப் பெண்ணுக்குமே இந்தக் கரு உருவாக வேண்டும் என்பது வினைப் பயனால் முடிவு செய்யப்பட்டது என்பதை உணராத ஆணும் பெண்ணும் மாயையில் ஒருவரோடு ஒருவர் கலந்து கரு உருவாகக் காரணமாகி, அந்தக் கருவுக்கும் தங்களது மாயையோடு சேர்த்துத் தங்களது பலவித குணங்களையும் கொடுத்துவிடுகின்றனர்.

வரி வாரியாக

  • வரி 1

    எத்தனையோ பிறவிகளை எடுத்து முடிந்தபின், இந்தப் பிறவியில் வினைப் பயனால் ஆண் பெண் இருவரும் சந்தித்து இன்பத்தில் கலக்கின்றனர்.

  • வரி 2

    அவர்களது உருவங்களிலிருந்தும் அவர்களது முன்னோர்களின் உருவங்களிலிருந்தும் பலவிதமான அம்சங்களை எடுத்துக்கொண்டு, அந்த அம்சங்களின் சாயலிலேயே உருவம் கொண்டு கரு உருவாகின்றது.

  • வரி 3

    ஆணும் பெண்ணும் இன்பத்தில் கலந்தபின் பெண்ணிடம் உருவான அந்தக் கரு புதிதாக உருவானதாக அனைவராலும் அறியப்பட்டாலும், அந்தக் கரு உருவாகுவதற்கு முன்பே இந்த ஆணுக்கும் இந்தப் பெண்ணுக்குமே இந்தக் கரு உருவாக வேண்டும் என்பது வினைப் பயனால் முடிவு செய்யப்பட்டது.

  • வரி 4

    இதை உணராத ஆணும் பெண்ணும் மாயையில் ஒருவரோடு ஒருவர் கலந்து கரு உருவாகக் காரணமாகி, அந்தக் கருவுக்கும் தங்களது மாயையோடு சேர்த்துத் தங்களது பலவித குணங்களையும் கொடுத்துவிடுகின்றனர்.

திருமந்திரம் பாடல் #459

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout