தொடர்ந்து படிக்கread this section continuously
ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.
உரைmeaning
ஆண் பெண் கூடலின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் விந்து பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாகும். ஆணின் விந்தை விடப் பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாகும். இரண்டும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாகும். இதில் ஆணின் விந்தில் உயிரணுவின் சக்தி மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை உலகையே ஆளும் அரசனைப் போல சீரும் சிறப்பும் மிக்கதாக இருக்கும். பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிக்கும் சக்தி மிகுதியாக இருந்தால் விந்து பாய்ந்தும் பயனின்றி கரு உருவாகாமலே போய்விடும்.
At the close of the union of man and woman, if in the fluid that mingles the man's seed is greater than the woman's fluid, what is born is a male child. If the woman's fluid is greater than the man's seed, what is born is a female child. If the two are equal, what is born is neither. When the vital force in the man's seed is very great, the child born is as full of order and glory as a king who rules the whole world. And when the destroying force in the woman's fluid is very great, then even though the seed has flowed, it comes to nothing and no embryo forms at all.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
ஆண் பெண் கூடலின் முடிவில் கலக்கும் நீரில் ஆணின் விந்து பெண்ணின் சுரோணிதத்தை விட அதிகமாக இருந்தால் பிறப்பது ஆண் குழந்தையாகும், பெண்ணின் சுரோணிதம் அதிகமாக இருந்தால் பிறப்பது பெண் குழந்தையாகும்.
At the close of the union of man and woman, if the man's seed is greater in the mingling fluid than the woman's fluid, what is born is a male child; if the woman's fluid is greater, what is born is a female child.
- வரி 2Line 2
இரண்டும் சமமாக இருந்தால் பிறப்பது அலியாகும்.
If the two are equal, what is born is neither.
- வரி 3Line 3
ஆணின் விந்தில் உயிரணுவின் சக்தி மிகுதியாக இருந்தால் பிறக்கும் குழந்தை உலகையே ஆளும் அரசனைப் போல சீரும் சிறப்பும் மிக்கதாக இருக்கும்.
When the vital force in the man's seed is very great, the child born is as full of order and glory as a king who rules the whole world.
- வரி 4Line 4
பெண்ணின் சுரோணிதத்தின் உயிரணு அழிக்கும் சக்தி மிகுதியாக இருந்தால் விந்து பாய்ந்தும் பயனின்றி கரு உருவாகாமலே போய்விடும்.
When the destroying force in the woman's fluid is very great, then even though the seed has flowed, it comes to nothing and no embryo forms at all.
திருமந்திரம் பாடல் #478





