திருமூலர் அருளிய திருமந்திரம்
21. சந்திர யோகம்

மூன்றாம் தந்திரம் பாடல் 851–883 (33 பாடல்கள்)

எய்து மதிக்கலை சூக்கத்தி லேறியேஎய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்எய்துங் கலை போல ஏறி இறங்குமாந்துய்யது குக்கத்துத் தூலத்த காயமே.

ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்ஆகின்ற ஈரெட்டொ டாறிரண் டீரைந்துள்ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழிஆகின்ற யோகியர் அறிந்த அறிவே.

ஆறாற தாங்கலை ஆதித்தன் சந்திரன்நாறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்பேறாங் கலைமுற்றும் பேருங்கால் ஈரெட்டும்மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலைபத்தினொ டாறும் உயர்கலை பான்மதிஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலைஅத்திறன் நின்றமையை ஆய்ந்துகொள் வீரே.

எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலைகட்டப் படுமீ தீரெட்டா மதிக்கலைஒட்டப் படாஇவை ஒன்றோடொன் றாகவே.

எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையென்பகட்டப் படுந்தார கைக்கதிர் நாலுளகட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே.

எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்நல்லோர் திருவடியை நண்ணிநிற் பாரே.

அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்தங்கிய தாரகை யாகும் சசிபானுபங்கிய தாரகை யாகும் பரையொளிதங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

தரணி சலங்கனல் கால்தக்க வானம்அரணிய பானு அருந்திங்கள் அங்கிமுரணிய தாரகை முன்னிய ஒன்பான்பிரணவ மாகும் பெருநெறி தானே.

தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்தாரகை பூவிற் சகலத்து யோனிகள்தாரகை தாரகை தானாஞ் சொரூபமே.

முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்செப்பரி யானின்கழல் சேர்தலு மாமே.

அங்கி எழுப்பி அருங்கதிர் வட்டத்துத்தங்குஞ் சசியினால் தாமம்ஐந் தைந்தாகிப்பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

ஒன்றிய ஈரெண் கலையும் உடலுறநின்றது கண்டும் நினைக்கிலர் நீசர்கள்கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்சென்று அதில்வீழ்வர் திகைப்பொழி யாரே.

அங்கி மதிகூட ஆகும் கதிரொளிஅங்கி கதிர்கூட ஆகும் மதியொளிஅங்கி சசிகதிர் கூடஅத் தாரகைதங்கிய அதுவே சகலமு மாமே.

ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலைபேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்துநேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

காணும் பரிதியின் காலை இடத்திட்டுமாணும் மதியதன் காலை வலத்திட்டுப்பேணியே யிவ்வாறு பிழையாமற் செய்வீரேல்ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்காலைக்குச் சங்கொளி கதிரவன் தானே.

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்பஎதிரவ னீசன் இடமது தானே.

உந்திக் கமலத் துதித்தெழுஞ் சோதியைஅந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்தந்தைக்கு முன்பாக மகன்பிறந் தானே.

ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்வேதியன் அங்கே வெளிப்படுவன் தானே.

பாம்பு மதியைத் தினலுறும் அப்பாம்புதீங்கு கதிரையுஞ் சேரத் தினலுறும்பாம்பும் மதியும் பகைதீர்த் துடன்கொளீர்நீங்குதல் கொடானே நெடுந்தகை யானே.

அயின்றது வீழ்வள வுந்துயில் இன்றிப்பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்றுநயந்தரு பூரணை உள்ள நடத்திவியந்தரு பூரணை மேவும் சசியே.

சசியுதிக் கும்அள வந்துயி லின்றிச்சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்சசிசரிக் கின்றள வுந்துயி லாமற்சசிசரிப் பிற்தன் கண்டுயில் கொண்டதே.

ஊழி பிரியா திருக்கின்ற யோகிகள்நாழிகை யாக நமனை அளப்பர்கள்ஊழி முதலாய் உயர்வார் உலகினில்தாழவல் லாரில்இச் சசிவன்னர் ராமே.

தண்மதி பானுச் சரிபூமி யேசென்றுமண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டுவெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்தண்மதி வீழ்அள விற்குஅண மின்றே.

வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறுந்தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும்மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடிஅலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.

ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்துபோம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்காமுற வின்மையிற் கட்டுண்ணு மூலத்தில்ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்ஈறிலி நங்கலை யீரைந்தொ டேமதிஆறுஉட் கலையுள் அகலுவா வாமே.

உணர்விந்து சோணி உறவினன் வீசும்புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்உணர்வும் உடம்பும் உவையொக்க நிற்கில்உணர்வும் உடம்பும் ஒருகால் விடாவே.

விடாத மனம்பவ னத்தொடு மேவிநடாவு சிவசங்கின் நாதங் கொளுவிக்கடாவிடா ஐம்புலன் கட்டுண்ணும் வீடுபடாத இன்பம் பருகார் அமுதமே.

அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்குமிழிக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச்சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்குநமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலங்கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

மாறு மதியும் மதித்திரு மாறின்றித்தாறு படாமல் தண்டோடே தலைப்படில்ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #851

1 / 33

0:000:00
21. சந்திர யோகம்பாடல் 851

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com