மாமாயை மாயை வயிந்தவம் வைகரிஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்பரிபுரை நாரணி யாம்பல வன்னத்திருள்புரை யீசி மனோன்மனி யென்னவருபல வாய்நிற்கு மாமாது தானே.
தானா யமைந்தவ முப்புரம் தன்னிடைத்தானான மூவுரு வோருருத் தன்மையள்தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்விதானான போகமும் முத்தியும் நல்குமே.
நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்பல்கும் பரவிந்து பாரண்ட மானவைநல்கும் பரைஅபி ராமி அகோசரிபுல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.
தாளணி நூபுரஞ் செம்பட்டுத் தானுடைவாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்ஏரணி யங்குச பாச மெழில்முடிகாரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.
குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்கண்டிகை யாரங் கதிர்முடி மாமதிச்சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.
நின்ற திரிபுரை நீளும் புராதனிகுன்றலில் மோகினி மாதிருக் குஞ்சிகைநன்றறி கண்டிகை நாற்காற் கரீடணிதுன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.
சுத்தவம் பாரத் தளித்த சுகோதயள்வத்துவ மாயா ளுமாசத்தி மாபரைஅத்தகை யான மனோரணி தானுமாய்வைத்தவக் கோல மதியவ ளாகுமே.
அவளை அறியா அமரரும் இல்லைஅவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லைஅவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லைஅவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.
அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்அறிவார் பரனும் அவளிடத் தானே.
தானெங் குளனங் குளதையன் மாதேவிஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்வானெங் குளவங் குளமந்த மாருதங்கோனெங்கு நின்ற குறிபல பாரே.
பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்உராசத்தி ஊழிகள் தோறும் உடனேபுராசத்தி புண்ணிய மாகிய போகமே.
போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்பாகஞ்செய் தாங்கே பராசத்தி யாய்நிற்கும்ஆகஞ்செய் தாங்கே அடியவர் நாள்தொறும்பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.
கொம்பனை யாளைக் குவிமுலை மங்கையைவம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியைநம்பியென் னுள்ளே நயந்துவைத் தேனே.
வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்பத்து முகமும் பரையும் பராபரைச்சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்சத்தியும் வித்தைத் தலைவியவ ளாமே.
தலைவி தடமுலை மேல்நின்ற தையல்தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகைகலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.
நின்றவள் நேரிழை நீள்கலை யோடுறஎன்றெ னகம்படிந் தேழுல குந்தொழமன்றது வொன்றி மனோன்மணி மங்கலிஒன்றெனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே.
ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழைஅத்தகை செய்கின்ற ஆய பெரும்பதிமத்தடை கின்ற மனோன்மனி மங்கலிசித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.
உணர்ந்துட னேநிற்கு முள்ளொளி யாகிமணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும்புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.
அளியொத்த பெண்பிள்ளை யானந்த சுந்தரிபுளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்தெளியுறு வித்துச் சிவகதி காட்டிஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.
உண்டில்லை என்ற துருச்செய்து நின்றதுவண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்ததுகண்டிலர் காரண காரணி தம்மொடுமண்டல முன்றுற மன்னிநின் றாளே.
நின்றா ளவன்ற னுடலு முயிருமாய்ச்சென்றாள் சிவகதி சேரும் பராசத்திஒன்றாக வென்னுட் புகுந்துணர் வாகியேநின்றாள் பரஞ்சுட ரேடங்கை யாளே.
ஏடங்கை நங்கை யிறைஎங்கண் முக்கண்ணிவேடம் படிகம் விரும்பும்வெண் டாமரைபாடுந் திருமுறை பார்ப்பனி பாதங்கள்சூடுமென் சென்னிவாய்த் தோத்திரஞ் சொல்லுமே.
தோத்திரஞ் செய்து தொழுது துணையடிவாய்த்திட வேத்தி வழிபடு வாரிரும்பார்த்திடு மங்குச பாசம் பசுங்கரும்பார்த்திடும் பூம்பிள்ளை யாகுமாம் ஆதிக்கே.
ஆதி விதமிகுத் தண்டந்த மாலங்கைநீதி மலரின்மே னேரிழை நாமத்தைப்பாதியில் வைத்துப் பலகாற் பயில்விரேற்சோதி மிகுத்துமுக் காலமுந் தோன்றுமே.
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்வேதாதி நூலின் விளங்கும் பராபரைஆதார மாகியே ஆயந்த பரப்பினள்நாதாதி நாதத்து நல்லரு ளாளே.
அருள்பெற் றவர்சொல்ல வாரீர் மனிதர்பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்பொருளுற்றுச் சேவடி போற்றுவன் யானே.
ஆன வராக முகத்தி பதத்தினள்ஈன வராக மிடிக்கு முசலத்தொடேனை யுழுபடை ஏந்திய வெண்ணகைஊன மறவுணர்ந் தாருள்ளத் தோங்குமே.
ஓங்காரி யென்பா ளவளொரு பெண்பிள்ளைநீங்காத பச்சை நிறத்தை யுடையவள்ஆங்காரி யாகியே யைவரைப் பெற்றிட்டுரீங்காரத் துள்ளே யினிதுஇருந் தாளே.
தானே தலைவி யெனநின்ற தற்பரைதானே யுயிர்வித்துத் தந்த பதினாலும்வானோர் தலமு மனமுநற் புத்தியுந்தானே சிவகதித் தன்மையு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #1045
1 / 30




