திருமூலர் அருளிய திருமந்திரம்
14. காலச்சக்கரம்

மூன்றாம் தந்திரம் பாடல் 740–769 (30 பாடல்கள்)

மதிவட்ட மாக வரையைந்து நாடிஇதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்அதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.

உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்பற்றிய பத்தும் பலவகை நாழிகைஅற்ற தறியாது அழிகின்ற வாறே.

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்றுமொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்கழிகின்ற காலறு பத்திரண் டென்பதெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

திருந்து தினமத் தினத்தி னொடுநின்றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்றுபொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கிவருந்துத லின்றி மனைபுக லாமே.

மனைபுகு வீரும் அகத்திடை நாடிஎனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறுவினையறி யாறு விளங்கிய நாலே.

நாலுங் கடந்தது நால்வரும் நாலைந்துபாலங் கடந்தது பத்துப் பதினைந்துகோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்டாலங் கடந்ததுஒன் றாரறி வாரே.

ஆறும் இருபதுக் கையஞ்சு மூன்றுக்குந்தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவைகூறு மதியொன் றினுக்கிரு பத்தேழுவேறு பதியங்கணன் நாள்விதித் தானே.

விதித்த இருபத்தெட் டொடுமூன் றாகத்தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்இறையிறை யார்க்கும் இருக்க அரிதுமறையது காரண மற்றொன்று மில்லைபறைபறை யாது பணிந்து முடியே.

முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டுகடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்குநடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும்பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடுஞ்சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில்உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே.

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்பாவிக ளித்தின் பயனறி வாரில்லைதீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்பூவினில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்குமண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்பிண்டம் பிரியவே பிணங்குகின் றாரே.

பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீஅணங்குட னாதித்த னாறு விரியின்வணங்குட னேவந்த வாழ்வு குலைந்துசுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்ஆத்தனு மாகி யலர்ந்துவிடு மொன்றே.

ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினிநன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்குன்றிடையில் பொன்திகழ் கூத்தனு மாமே.

கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கேஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்சாத்திடு நூறு தலைப்புஎய்ய லாமே.

சாற்றிடு நூறு தலைப்பெய்து நின்றவர்காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்மூத்துடன் கோடியே யுகமது வாமே.

உகங்கோடி கண்டும் ஒசிவற நின்றுஅகங்கோடி கண்டுள் அயலறக் காண்பர்சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்குகங்கோடி கண்டங் குயருறு வாரே.

உயருறு வாருல கத்தொடுங் கூடிப்பயனுறு வார்பலர் தாமறி யாமற்செயலுறு வார்சிலர் சிந்தையி லாமல்கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்நாணகி லார்நயம் பேசி விடுவர்கள்காணகி லாதார் கழிந்த பொருளெலாங்காணகி லாமலே கழிகின்ற வாறே.

கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்கழியாத அப்பொருள் காணலு மாமே.

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளேஎண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடும்திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லைநாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்தேடவல் லார்கள் தெரிந்த பொருளிதுகூடவல் லார்களுக்குக் கூறலு மாமே.

கூறும் பொருளி தகார வுகாரங்கள்தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்கூறும் மகாரங் குழல்வழி யோடிடஆறும் அமர்ந்திருக்கும் அண்ணலு மாமே.

அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்களுக்கண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்அண்ணலைக் காணில் அவனிவ னாகுமே.

அவனிவ னாகும் பரிசறி வார்இல்அவனிவ னாகும் பரிசது கேள்நீஅவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிஅவனிவன் வட்டம தாகிநின் றானே.

வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளேசிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்ஒட்டி யிருந்துள் உபாயம் உணர்ந்திடக்கட்டி யிருப்பிடங் காணலு மாகுமே.

காணலு மாகும் பிரமன் அரியென்றுகாணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்காணலு மாகுஞ் சதாசிவ சத்தியும்காணலு மாகுங் கலந்துடன் வைத்ததே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #740

1 / 30

0:000:00
14. காலச்சக்கரம்பாடல் 740

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com