திருமூலர் அருளிய திருமந்திரம்
13. சரீர சித்தி உபாயம்

மூன்றாம் தந்திரம் பாடல் 724–739 (16 பாடல்கள்)

உடம்பார் அழியில் உயிரார் அழிவார்திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே.

அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுளஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டூன்றி யிருக்கவே உடலழி யாதே.

நூறும் அறுபதும் ஆறும் வலம்வரநூறும் அறுபதும் ஆறும் இடம்வரநூறும் அறுபதும் ஆறும் எதிரிடநூறும் அறுபது மாறும் புகுவரே.

சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாந்தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்சத்தியஞ் சொன்னோம் சதாநந்தி ஆணையே.

திறத்திறம் விந்து திகழும் அகாரம்உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்மறிப்பது மந்திர மன்னிய நாதம்அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்சிந்தித் தெழுப்பவே சிவனவ னாமே.

மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்கூறா உபதேசங் கொண்டது காணுமே.

நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்குஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லைபிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்உண்டி சுருங்கில் உபாயம் பலவுளகண்டங் கருத்தநற் கபாலியு மாமே.

பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலைஅண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்வண்டுஇச் சிக்கும் மலர்க்குழல் மாதரார்கண்டுஇச் சிக்கும்நல்ல காயமு மாமே.

சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறிஅழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்கழல்கொள் திருவடிக் காண்குறில் ஆங்கேநிழலுளுந் தெற்றுளும் நிற்றலு மாமே.

நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாகமான்கன்று நின்று வளருகின்ற வாறே.

ஆகுஞ் சனவேத சக்தியை அன்புறநீர்கொள நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்ஊழ்கொண்ட மந்திரந் தான்கொண்டு ஒடுங்கே.

மூலப்பாடல் மட்டும் · original verses only

திருமந்திரம் பாடல் #724

1 / 16

0:000:00
13. சரீர சித்தி உபாயம்பாடல் 724

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com