ஆதியோ டந்தம் இலாத பராபரம்போதம தாகப் புணரும் பராபரைசோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்தீதில் பரையதன் பால்திகழ் நாதமே.
நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்றேபேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.
இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்கல்லொளி போலக் கலந்துள் இருந்திடும்வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்சார்வத்துச் சத்திஒரு சாத்துமா னாமே.
மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்கானின்கண் நீரும் கலந்து கடினமாய்த்தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடைகாயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடைஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்திநீரிடை மண்ணின் நிலைப்பிறப்பு ஆமே.
உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகிஅண்டத் தமரர் தலைவனும் ஆதியும்கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்பண்டுஇவ் வுலகம் படைக்கும் பொருளே.
ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.
பயன்எளி தாம்பரு மாமணி செய்யநயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டுஅயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்பயன்எளி தாம்வய ணந்தெளிந் தேனே.
போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்துமேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.
நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்ஒன்றுயி ராக்கும் அளவை உடலுறமுன்துய ராக்கும் உடற்குந் துணையதாநன்றுஉயிர்ப் பானே நடுவுநின் றானே.
ஆகின்ற தன்மையி லக்கணி கொன்றையன்வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்போகின்ற சீவன் புகுந்துட லாயுளன்ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.
ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்பருவங்கள் தோறும் பயன்பல வானதிருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.
ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்காரிய காரண ஈசர் கடைமுறைபேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்தாணவம் நீங்கா தவரென லாகுமே.
உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்துபெற்றவள் நாதம் பரையிற் பிறத்தலால்துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.
ஆகாய மாதி சதாசிவ ராதியென்போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.
அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்அளியார் திரிபுரை யாம்அவள் தானேஅளியார் சதாசிவ மாகி அமைவாள்அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.
வாரணி கொங்கை மனோன்மணி மங்கலிகாரண காரிய மாகக் கலந்தவள்வாரணி ஆரணி வானவர் மோகினிபூரணி போதஅதி போதமு மாமே.
நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்சென்றங் கியங்கி அரன்திரு மாலவன்மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்என்றிவ ராக இசைந்துஇருந் தானே.
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்ஒருவனு மேஉல கேழும் அளித்தான்ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்ஒருவனு மேஉட லோடுயிர் தானே.
செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறைமஞ்சார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்துக்கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்துமைந்தார் பிறவியை அமைந்துநின் றானே.
தேடும் திசைஎட்டுஞ் சீவன் உடலுயிர்கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்திஊடும் அவர்தம துள்ளத்தி னுள்நின்றுநாடும் வழக்கமும் நானுமறிந் தேனே.
ஓராய மேஉல கேழும் படைப்பதும்ஓராய மேஉல கேழும் அளிப்பதும்ஓராய மேஉல கேழும் துடைப்பதும்ஓராய மேஉட லோடுஉயிர் தானே.
நாதன் ஒருவனும் நல்ல இருவரும்கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்ஏது பணியென் றிசையும் இவர்கட்குஆதி இவனேதான் அருளுகின் றானே.
அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்அப்பரி சேதென்று புகலும் மனிதர்அப்பரி சேஇருளாய் மூடிநின் றாரே.
ஆதித்தன் சந்திரன் அங்கி எண்பாலர்கள்போதித்த வானொலி பொங்கெரி நீர்புவிவாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #381
1 / 30




