தொடர்ந்து படிக்கread this section continuously
புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.
உரைmeaning
குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து, அவற்றிற்கான தன்மைகளைக் குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார். அதன்மூலம் நல்வினைகளை அருளி, சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து, உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள். சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்து, சிவத்துடன் கலந்து மண்ணாகவும், சக்தியோடு கலந்து நீராகவும் ஆகி, இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது. இப்படி, மலரில் கலந்திருக்கும் வாசனை போல, சிவமும் சக்தியும் உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தேயிருக்கின்றன.
Sadashivamurthi, as the guru, creates cool water and earth and gives them their nature. Through this he grants good deeds, and Sakthi, joined together with Sadashivamurthi, nurtures water and earth throughout all the worlds. The thought that arose within Sadashivamurthi's moving power mingles with Sivam to become earth, and mingles with Sakthi to become water, and the two, mingling together, turn into the worlds. In this way, like fragrance mingled within a flower, Sivam and Sakthi remain mingled together as one throughout the world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
குளிர்ந்த நீரையும் மண்ணையும் படைத்து, அவற்றிற்கான தன்மைகளைக் குருவாக இருந்து சதாசிவமூர்த்தி கொடுக்கின்றார்.
Sadashivamurthi, as the guru, creates cool water and earth and gives them their nature.
- வரி 2Line 2
அதன்மூலம் நல்வினைகளை அருளி, சதாசிவமூர்த்தியுடன் ஒன்றாகச் சேர்ந்து, உலகங்கள் அனைத்திலும் நீரையும் மண்ணையும் சக்தி வளர்க்கின்றாள்.
Through this he grants good deeds, and Sakthi, joined together with Sadashivamurthi, nurtures water and earth throughout all the worlds.
- வரி 3Line 3
சதாசிவமூர்த்தியின் அசையும் சக்தியான எண்ணத்திலே உதித்த கருத்து, சிவத்துடன் கலந்து மண்ணாகவும், சக்தியோடு கலந்து நீராகவும் ஆகி, இரண்டும் கலந்து உலகங்களாகவும் மாறுகின்றது.
The thought that arose within Sadashivamurthi's moving power mingles with Sivam to become earth, and mingles with Sakthi to become water, and the two, mingling together, turn into the worlds.
- வரி 4Line 4
இப்படி, மலரில் கலந்திருக்கும் வாசனை போல, சிவமும் சக்தியும் உலகமெங்கும் ஒன்றாகக் கலந்தேயிருக்கின்றன.
In this way, like fragrance mingled within a flower, Sivam and Sakthi remain mingled together as one throughout the world.
திருமந்திரம் பாடல் #387





