திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 386

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்திபுவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்புவனம் படைப்பானும் பூமிசை யானாய்புவனம் படைப்பானப் புண்ணியன் தானே.

உரை

உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமே. அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக, அவர்களுடைய சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐவர். அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து, உலகங்கள் அனைத்துமாகவும் அவற்றிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.

வரி வாரியாக

  • வரி 1

    உலகங்களைப் படைப்பது ஒலியாகிய சிவமும் ஒளியாகிய சக்தியுமே.

  • வரி 2

    அந்த உலகங்களில் பல தொழில்களைப் புரிவதற்காக, அவர்களுடைய சக்தியிலிருந்து தோன்றிய பிள்ளைகள் ஐவர்.

  • வரி 3

    அனைத்தையும் படைப்பதற்குக் காரணமான சதாசிவமூர்த்தியே, ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை மலரில் வீற்றிருந்து,

  • வரி 4

    உலகங்கள் அனைத்துமாகவும் அவற்றிலிருக்கும் உயிர்கள் அனைத்துமாகவும் இருக்கின்றான்.

திருமந்திரம் பாடல் #386

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout