தொடர்ந்து படிக்கread this section continuously
காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்நாரணன் நின்ற நடுவுட லாய்நிற்கும்பாரணன் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்ஆரணனு மாய்உல காய்அமர்ந் தானே.
உரைmeaning
அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி, அனைத்திலும் அன்பாகக் கலந்திருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான். அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாகவும் அவனே இருக்கின்றான். அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அவற்றிலிருக்கும் பொருள்களாகவும், அவற்றில் வாழும் உயிர்களாகவும் இருந்து, அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.
Sadashivamurthi, who is the cause of the coming into being of all moving and unmoving things, remains mingled with love in everything. He himself is Thirumal, who bears up and protects all the substances that form the bodies of every moving and unmoving thing. He himself is also Brahma of the four faces, who creates beings with love by chanting the Vedas in all those moving and unmoving things. It is God, Sadashivamurthi himself, who is all moving and unmoving things, and the substances within them, and the beings that live in them, and who binds them all together with love.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
அண்ட சராசரங்கள் அனைத்தும் உருவாகக் காரணமானவனாகிய சதாசிவமூர்த்தி, அனைத்திலும் அன்பாகக் கலந்திருக்கின்றான்.
Sadashivamurthi, who is the cause of the coming into being of all moving and unmoving things, remains mingled with love in everything.
- வரி 2Line 2
அண்ட சராசரங்கள் அனைத்திலும் உடலாக இருக்கும் பொருள்கள் அனைத்தையும் தாங்கிக் காப்பாற்றி நிற்கும் திருமாலாகவும் அவனே இருக்கின்றான்.
He himself is Thirumal, who bears up and protects all the substances that form the bodies of every moving and unmoving thing.
- வரி 3Line 3
அந்த அண்ட சராசரங்கள் அனைத்திலும் உயிர்களை அன்போடு வேதங்கள் ஓதி உருவாக்கும், நான்கு முகங்களைக் கொண்ட பிரமனாகவும் அவனே இருக்கின்றான்.
He himself is also Brahma of the four faces, who creates beings with love by chanting the Vedas in all those moving and unmoving things.
- வரி 4Line 4
அண்ட சராசரங்கள் அனைத்துமாகவும், அவற்றிலிருக்கும் பொருள்களாகவும், அவற்றில் வாழும் உயிர்களாகவும் இருந்து, அன்பினால் கட்டி வைத்திருப்பவன் சதாசிவமூர்த்தியாகிய இறைவனே.
It is God, Sadashivamurthi himself, who is all moving and unmoving things, and the substances within them, and the beings that live in them, and who binds them all together with love.
திருமந்திரம் பாடல் #391





