திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 390

இரண்டாம் தந்திரம்9. சர்வ சிருஷ்டி

தொடர்ந்து படிக்கread this section continuously

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்வீங்குங் கமல மலர்மிசை மேலயன்ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

உரை

ஓங்கிய பாற்கடலின்மேல் இருக்கும் திருமாலும், அழகிய கயிலை மலையின்மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும், மலர்ந்து விரிந்திருக்கின்ற தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப்பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்திருக்கின்றார்கள். பிரமன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவருமே உணர்ந்திருக்கின்றார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    ஓங்கிய பாற்கடலின்மேல் இருக்கும் திருமாலும், அழகிய கயிலை மலையின்மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும்,

  • வரி 2

    மலர்ந்து விரிந்திருக்கின்ற தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப்பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்திருக்கின்றார்கள்.

  • வரி 3

    பிரமன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்கின்றனர்.

  • வரி 4

    இப்படி அவர்கள் செயல்படுகின்ற உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவருமே உணர்ந்திருக்கின்றார்கள்.

திருமந்திரம் பாடல் #390

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout