கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்அட்டத்தைக் கட்டி அடுப்பை அணை கோலிவிட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்துநட்ட மிருக்க நமனில்லை தானே.
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்கண்ணாறு மோழை படாமற் கரைகட்டிவிண்ணாறு பாய்ச்சிக் குளத்தை நிரப்பினால்அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாஉறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கிறக்கவும் வேண்டா இருக்கலு மாமே.
ஆய்ந்துரை செய்யில் அமுதநின் றூறிடும்வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்துநீந்துரை செய்யில் நிலாமண் டலமாய்ப்பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.
நாவின் நுனியை நடுவே விசிறிடிற்சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர்சாவதும் இல்லை சதகோடி ஊனே.
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்வானூறல் பாயும் வகையறி வாரில்லைவானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்தேனூறல் உண்டு தெளியலு மாமே.
மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்காலனும் இல்லைக் கதவந் திறந்திடும்ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்பாலனு மாவான் பராநந்தி ஆணையே.
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்நாவினை நாடின் நமனுக் கிடமில்லைபாவினை நாடிப் பயனறக் கண்டவர்தேவினை யாடிய தீங்கரும் பாமே.
தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திடஊன்கரும் பாகியே ஊனீர் வருமே.
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்தேனீர் பருகிச் சிவாய நமவென்றுகானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்காய்ந்தறி வாகக் கருணை பொழிந்திடும்பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலுமாமே.
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்தாயினும் நல்லார் தரணி முழுதுக்கும்காயினும் நல்லவர் காய்ந்தவர் தம்முளுந்தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்மாவினை யாளர்தம் மதியிலுள் ளானே.
மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்பதிமனை நூறுநூற் றிருபத்து நாலாய்க்கதிமனை யுள்ளே கணைகள் பரப்பிஎதிர்மலை யாமல் இருந்தனன் தானே.
இருந்தனள் சத்தியு மக்கலை சூழஇருந்தனள் கன்னியு மந்நடு வாகஇருந்தனள் மானேர் முகநில வாரஇருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.
பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்வழிந்துள் ளிருந்தது வான்முத லங்குக்கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்கொழுந்தது வாகுங் குணமது தானே.
குணமது வாகிய கோமள வல்லிமணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்தனமது வாகிய தத்துவ ஞானம்இனமது வாக இருந்தனன் தானே.
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்பரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரியவிரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.
மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிப்பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்குண்டலக் காதனுங் கூத்தொழிந் தானே.
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்கழிகின்ற வாயுவும் காக்கலு மாகும்வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.
பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்மையணி கோயில் மணிவிளக் காமே.
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னிநலங்கிடும் கண்டத்து நாபியி னுள்ளேவணங்கிடு மண்டலம் வாய்ந்திடக் கும்பிச்சுணங்கிட நின்றவை சொல்லலு மாமே.
சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்சொல்லலு மாகு மனல்நீர்க் கடினமுஞ்சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.
தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்காராருங் கண்ணி கடைஞான முட்பெய்துஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்பாரா ருலகமும் பகன்முன்ன தாமே.
முன்னெழு நாபிக்கு முந்நால் விரற்கீழேபன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்தன்னெழு கோயில் தலைவனு மாமே.
மூலப்பாடல் மட்டும் · original verses only
திருமந்திரம் பாடல் #799
1 / 26




