திருமூலர் அருளிய திருமந்திரம்
திருமூலர்

பாயிரம் பாடல் 73–94 (22 பாடல்கள்)

நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டுபுந்தியின் உள்ளே புகப்பெய்து போற்றிசெய்துஅந்தி மதிபுனை அரனடி நாடொறும்சிந்தைசெய் தாகமம் செப்பலுற் றேனே.

உரை · meaning

குருநாதராக வந்த நந்தியின் இணையில்லாத திருவடிகளை என் தலைமேல் வைத்துக்கொண்டு, அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்தி, சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனைத் திருமுடியில் அணிந்த 'அரன்' எனும் இறைவனின் பெருமைகளைப் போற்றி, அவன் திருவடிகளை நாள்தோறும் சிந்தித்துத் தியானித்துக்கொண்டு, அவன் அருளிய ஆகமங்களைச் சொல்கின்றேன்.

Placing upon my head the peerless holy feet of Nandi, who came as my own guru, holding in my memory everything he graciously taught so it would enter and remain within my understanding, and praising the greatness of God, called Aran, who wears upon his crown the young crescent moon that appears at twilight, meditating on his holy feet every single day, I recite the Agamas he graciously gave.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    குருநாதராக வந்த நந்தியின் இணையில்லாத திருவடிகளை என் தலைமேல் வைத்துக்கொண்டு,

    Placing upon my head the peerless holy feet of Nandi, who came as my own guru,

  • வரி 2

    அவர் அருளிய அனைத்தையும் எனது புத்திக்குள் புகுந்து நிற்கும்படி நினைவில் நிறுத்தி, அவரைப் போற்றி,

    holding in my memory everything he graciously taught, so it would enter and remain within my understanding, and praising him,

  • வரி 3

    சூரியன் மறைவில் தோன்றும் இளம்பிறைச் சந்திரனைத் திருமுடியில் அணிந்த 'அரன்' எனும் இறைவனின் திருவடிகளை நாள்தோறும்,

    the holy feet of God, called Aran, who wears upon his crown the young crescent moon that appears at twilight, every single day,

  • வரி 4

    சிந்தித்துத் தியானித்துக்கொண்டு, அவன் அருளிய ஆகமங்களைச் சொல்கின்றேன்.

    meditating on them, I recite the Agamas he graciously gave.

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

உரை · meaning

சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் 'சிவாகமம்' என்ற பேர் பெற்றது அந்த ஆகமம். அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல, அவரின் திருவடிகளை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டேன். ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திருநடனத்தைக் கண்டு களித்தேன். அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

That Agama came to be called Sivagama because it was spoken by Sivaperuman himself. He himself, as my guru, spoke it, and I received it by worshipping his holy feet. I saw and delighted in the sacred dance that God performed in the faultless hall of Thillai. I remained absorbed in the thought of that peerless God alone for a whole crore of ages.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் 'சிவாகமம்' என்ற பேர் பெற்றது அந்த ஆகமம்.

    That Agama came to be called Sivagama because it was spoken by Sivaperuman himself.

  • வரி 2

    அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல, அவரின் திருவடிகளை வணங்கி அதைப் பெற்றுக்கொண்டேன்.

    He himself, as my guru, spoke it, and I received it by worshipping his holy feet.

  • வரி 3

    ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திருநடனத்தைக் கண்டு களித்தேன்.

    I saw and delighted in the sacred dance that God performed in the faultless hall of Thillai.

  • வரி 4

    அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

    I remained absorbed in the thought of that peerless God alone for a whole crore of ages.

இருந்தவக் காரணம் கேளிந் திரனேபொருந்திய செல்வப் புவனா பதியாம்அருந்தவச் செல்வியைச் சேவித் தடியேன்பரிந்துடன் வந்தனன் பத்தியி னாலே.

உரை · meaning

யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள், இந்திரனே. அனைத்துவிதச் செல்வங்களையும் கொண்ட, உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன், எளிதில் செய்யமுடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் அவனுடைய திருவடிகளை நான் தொழுதபோது, எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனேயே அவனும் வந்து இருந்ததால்தான், என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

Hear the reason I was able to remain in penance, O Indra. God, lord of all the worlds and possessor of every kind of wealth, whose feet come only to those rare few who achieve penance that is not easily accomplished, when I worshipped those feet, he was moved by my devotion, and out of his compassion came and remained with me himself. It was because of this alone that I was able to remain there for a whole crore of ages.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    யாம் தவத்தில் இருக்க முடிந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள், இந்திரனே.

    Hear the reason I was able to remain in penance, O Indra.

  • வரி 2

    அனைத்துவிதச் செல்வங்களையும் கொண்ட, உலகங்கள் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவன்,

    God, lord of all the worlds and possessor of every kind of wealth,

  • வரி 3

    எளிதில் செய்யமுடியாத அரிய தவம் செய்பவர்களுக்குக் கிடைக்கும் அவனுடைய திருவடிகளை நான் தொழுதபோது,

    whose feet come only to those rare few who achieve penance that is not easily accomplished, when I worshipped those feet,

  • வரி 4

    எம் பக்தியைக் கண்டு கருணை கொண்டு என்னுடனேயே அவனும் வந்து இருந்ததால்தான், என்னால் ஒரு கோடி யுகம் இருக்க முடிந்தது.

    he was moved by my devotion, and out of his compassion came and remained with me himself, and it was because of this alone that I was able to remain there for a whole crore of ages.

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்இதாசனி யாதிருந் தேன்மனம் நீங்கிஉதாசனி யாதுட னேயுணர்ந் தோமே.

உரை · meaning

பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐவர் மூலம் ஐந்து தொழில் புரியும் சதாசிவமூர்த்தியின் ஆகமத் தத்துவங்களையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும், நான்மறை வேதங்களையும் யாம் அளவின்றிப் பெற்றோம். அவற்றிலேயே மனம் திளைத்து, கடந்துசெல்லும் காலத்தின்மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தேன். அப்படி இருந்தபோதும், இனியும் சென்றுகொண்டிருக்கும் காலத்தை உதாசீனப்படுத்தாமல், காலத்தின் தேவையை உடனே உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

We received without measure the philosophy of the Agamas of Sadasivamurthy, who carries out his five acts through the five deities Brahma, Thirumal, Rudra, Mahesvara and Isan, together with the three branches of Tamil, Iyal, Isai and Nadagam, and the four Vedas. My mind remained absorbed in them alone, giving no thought to the time that was passing. Even so, God, who remained with me, made me understand at once that I should not neglect the time still passing, but should recognise what the time demanded and pass all of this on to others.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பிரம்மன், திருமால், உருத்திரன், மகேசுவரன், ஈசன் ஆகிய ஐவர் மூலம் ஐந்து தொழில் புரியும் சதாசிவமூர்த்தியின் ஆகமத் தத்துவங்களையும், இயல் இசை நாடகம் ஆகிய முத்தமிழையும், நான்மறை வேதங்களையும் யாம் அளவின்றிப் பெற்றோம்.

    We received without measure the philosophy of the Agamas of Sadasivamurthy, who carries out his five acts through the five deities Brahma, Thirumal, Rudra, Mahesvara and Isan, together with the three branches of Tamil, Iyal, Isai and Nadagam, and the four Vedas.

  • வரி 2

    அவற்றிலேயே மனம் திளைத்து, கடந்துசெல்லும் காலத்தின்மேல் மனதைச் செலுத்தாமல் இருந்தேன்.

    My mind remained absorbed in them alone, giving no thought to the time that was passing.

  • வரி 3

    அப்படி இருந்தபோதும், இனியும் சென்றுகொண்டிருக்கும் காலத்தை உதாசீனப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதை,

    Even so, that I should not neglect the time still passing,

  • வரி 4

    காலத்தின் தேவையை உடனே உணர்ந்து இவற்றை மற்றவர்களுக்கு வழங்கவேண்டும் என்பதை என்னுடன் இருந்த இறைவன் உணர்த்தினான்.

    God, who remained with me, made me understand at once that I should recognise what the time demanded and pass all of this on to others.

மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம்நீலாங்க மேனியள் நேரிழை யாளொடுமூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே.

உரை · meaning

எமது சீடனாகிய மாலாங்கனே, இந்த உலகத்திற்கு யான் வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள். நீல நிற மேனியைக் கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும், ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து, உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும், இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை, மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

O Malangan, my own disciple, hear the reason I came to this world. Sakthi Devi, dark blue in form, who stands as the exact half of God's own sacred body, and God, the primal source, together performed the sacred dance for the salvation of all beings, and the philosophy of that dance, together with the rare, great disciplines that open the way to reaching God, this Veda I came only to bring and declare to others.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    எமது சீடனாகிய மாலாங்கனே, இந்த உலகத்திற்கு யான் வந்ததின் காரணத்தைக் கேட்டுக்கொள்.

    O Malangan, my own disciple, hear the reason I came to this world.

  • வரி 2

    நீல நிற மேனியைக் கொண்டு இறைவனின் திருமேனியில் சரிபாகமாக இருக்கும் சக்தி தேவியும்,

    Sakthi Devi, dark blue in form, who stands as the exact half of God's own sacred body,

  • வரி 3

    ஆதிமூலமாகிய இறைவனும் சேர்ந்து, உயிர்கள் உய்யும் பொருட்டு புரிந்த திருநடனத்தின் தத்துவங்களையும்,

    and God, the primal source, together performed the sacred dance for the salvation of all beings, and the philosophy of that dance,

  • வரி 4

    இறைவனை அடைய வழிவகுக்கும் அரும்பெரும் ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய வேதத்தை, மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கவே யான் வந்தேன்.

    together with the rare, great disciplines that open the way to reaching God, this Veda I came only to bring and declare to others.

நேரிழை யாவாள் நிரதிச யானந்தப்பேருடை யாளென் பிறப்பறுத் தாண்டவள்சீருடை யாள்சிவன் ஆவடு தண்டுறைசீருடை யாள்பதம் சேர்ந்திருந் தேனே.

உரை · meaning

இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும், என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் உமா தேவி. பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும், சீரும் சிறப்பும் உடையவளும் அவளே. தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டிப் பசு மாடாக இருந்து தவம்புரிந்த திருஆவடுதுறைத் திருத்தலத்தில், இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே, நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

Uma Devi stands as the exact half of God's own sacred body, and bears the name of an unending bliss. She cut away my birth and took me fully under her own protection, and she carries great glory and greatness. At the sacred place of Thiru Avaduthurai, where she once performed penance as a cow, seeking the grace of her Lord Sivaperuman, worshipping the holy feet of Sivasakthi, where both are enshrined together, I remained in that sacred place.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனின் திருமேனியில் சரிபாகம் கொண்டவளும், என்றும் நீங்காத ஆனந்தத்தின் பெயரை உடையவளும் உமா தேவி.

    Uma Devi stands as the exact half of God's own sacred body, and bears the name of an unending bliss.

  • வரி 2

    பிறப்பை நீக்கி என்னை முழுமையாக ஆட்கொண்டவளும், சீரும் சிறப்பும் உடையவளும் அவளே.

    She cut away my birth and took me fully under her own protection, and she carries great glory and greatness.

  • வரி 3

    தம் தலைவன் சிவபெருமானின் அருள் வேண்டிப் பசு மாடாக இருந்து தவம்புரிந்த திருஆவடுதுறைத் திருத்தலத்தில்,

    At the sacred place of Thiru Avaduthurai, where she once performed penance as a cow, seeking the grace of her Lord Sivaperuman,

  • வரி 4

    இருவரும் சேர்ந்து வீற்றிருக்கும் சிவசக்தியின் திருவடிகளைத் தொழுதுகொண்டே, நான் அத்திருத்தலத்தில் இருந்தேன்.

    worshipping the holy feet of Sivasakthi, where both are enshrined together, I remained in that sacred place.

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்சேர்ந்திருந் தேன்சிவன் ஆவடு தண்டுறைசேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலில்சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே.

உரை · meaning

சிவமங்கையாகிய சக்தி தேவியின் பங்குடன் இருக்கும் சிவபெருமானுடன் சேர்ந்திருந்தேன். சிவபெருமான் வீற்றிருக்கும் திருஆவடுதுறைத் திருத்தலத்திலேயே சேர்ந்திருந்தேன். இறைவன் ஞானம் போதித்த படர் அரசமரத்தின் நிழலில் சேர்ந்திருந்தேன். சிவனுடைய திருநாமங்களை ஓதிக்கொண்டே சேர்ந்திருந்தேன்.

I remained joined with Sivaperuman, together with Sivamangai, Sakthi Devi, his own half. I remained there, at the sacred place of Thiru Avaduthurai, where Sivaperuman is enshrined. I remained seated in the shade of the spreading fig tree beneath which God taught wisdom. I remained there, chanting Shiva's sacred names.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சிவமங்கையாகிய சக்தி தேவியின் பங்குடன் இருக்கும் சிவபெருமானுடன் சேர்ந்திருந்தேன்.

    I remained joined with Sivaperuman, together with Sivamangai, Sakthi Devi, his own half.

  • வரி 2

    சிவபெருமான் வீற்றிருக்கும் திருஆவடுதுறைத் திருத்தலத்திலேயே சேர்ந்திருந்தேன்.

    I remained there, at the sacred place of Thiru Avaduthurai, where Sivaperuman is enshrined.

  • வரி 3

    இறைவன் ஞானம் போதித்த படர் அரசமரத்தின் நிழலில் சேர்ந்திருந்தேன்.

    I remained seated in the shade of the spreading fig tree beneath which God taught wisdom.

  • வரி 4

    சிவனுடைய திருநாமங்களை ஓதிக்கொண்டே சேர்ந்திருந்தேன்.

    I remained there, chanting Shiva's sacred names.

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

உரை · meaning

இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன். இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன். பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன். எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

I remained in this body for uncountable crores of years. I remained in a place without night and without day, the subtle expanse. I remained in a place praised by thousands upon thousands of gods, sages and siddhas. I remained seated beneath the peerless, matchless holy feet of God, my own guru.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன்.

    I remained in this body for uncountable crores of years.

  • வரி 2

    இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன்.

    I remained in a place without night and without day, the subtle expanse.

  • வரி 3

    பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன்.

    I remained in a place praised by thousands upon thousands of gods, sages and siddhas.

  • வரி 4

    எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

    I remained seated beneath the peerless, matchless holy feet of God, my own guru.

பின்னைநின் றென்னே பிறவி பெறுவதுமுன்னைநன் றாக முயல்தவம் செய்கிலர்என்னைநன் றாக இறைவன் படைத்தனன்தன்னைநன் றாகத் தமிழ்செய்யு மாறே.

உரை · meaning

இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் தாமாக முயன்று தவம் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்துபவர்கள் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்படிப் பிறவியை வீணாக்காமல் இறைவனை உயிர்கள் அடையும் வழிகள் அனைத்தையும், குருநாதராக இருந்து எனக்குப் போதித்த இறைவன், அவற்றை நன்றாகத் தமிழில் வழங்குமாறே என்னை இங்கே அனுப்பி வைத்தான்.

Those who pass their lives idly, without striving on their own to perform the penance needed to reach God, are born again and again without end. So that beings would not waste their birth in this way, God, who taught me all the ways of reaching him while standing as my own guru, sent me here for this very purpose: to set out all of that well, in Tamil.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை அடைய வேண்டும் என்ற ஆசையில் தாமாக முயலாமல் இருப்பவர்கள் என்ன ஆகின்றனர்?

    What becomes of those who do not strive on their own with the wish to reach God?

  • வரி 2

    அவர்கள் தவம் செய்யாமல் வாழ்க்கையை வீணே கடத்தி, மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

    Without performing penance, they pass their lives idly, and are born again and again without end.

  • வரி 3

    இப்படிப் பிறவியை வீணாக்காமல் இறைவனை அடையும் வழிகள் அனைத்தையும் எனக்குப் போதித்த இறைவன்,

    So that beings would not waste their birth this way, God, who taught me all the ways of reaching him,

  • வரி 4

    அவற்றை நன்றாகத் தமிழில் வழங்குமாறே என்னை இங்கே அனுப்பி வைத்தான்.

    sent me here for this very purpose, to set all of it out well, in Tamil.

ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்குஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்துநானும் இருந்தேன்நற் போதியின் கீழே.

உரை · meaning

பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய நந்தி இருக்கும் இடத்தில் புகுந்து, ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக அங்கே இருந்தேன். ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பாலை ஊற்றி நாதனை அர்ச்சனை செய்தேன். இறைவனின் நல் திருவடியின் கீழ் நானும் இருந்தேன்.

Entering the place where Nandi, lord of supreme wisdom and my own guru, dwells, I remained there for nine crore ages without a single flaw. I poured the ambrosial milk born of wisdom and worshipped the Lord. I too remained, seated beneath his own gracious holy feet.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய நந்தி இருக்கும் இடத்தில் புகுந்தேன்.

    I entered the place where Nandi, lord of supreme wisdom and my own guru, dwells.

  • வரி 2

    ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக அங்கே இருந்தேன்.

    I remained there for nine crore ages without a single flaw.

  • வரி 3

    ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பாலை ஊற்றி நாதனை அர்ச்சனை செய்தேன்.

    I poured the ambrosial milk born of wisdom and worshipped the Lord.

  • வரி 4

    இறைவனின் நல் திருவடியின் கீழ் நானும் இருந்தேன்.

    I too remained, seated beneath his own gracious holy feet.

செல்கின்ற வாறறி சிவமுனி சித்தசன்வெல்கின்ற ஞானத்து மிக்கோர் முனிவராய்ப்பல்கின்ற தேவர் அசுரர் நரர்தம்பால்ஒல்கின்ற வான்வழி யூடுவந் தேனே.

உரை · meaning

நல் நெறிகளின் மூலம் இறைவனை அடையும் வழிகளை அறிந்து, சிவனை மனதுள் வைத்துத் துதித்த முனிவனாக நான் இருந்தேன். மனதை வெல்லக்கூடிய பேரறிவு ஞானத்தை மிகவும் பெற்ற முனிவராகவும் நான் இருந்தேன். பல்லாயிரக்கணக்கான தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் மேலுலகம் செல்லும் வழியே, நுண்ணிய (சூட்சும) வானத்தின் வழியே யானும் புகுந்து இந்தப் பூமியை நோக்கி வந்தேன்.

I lived as a sage who knew the ways of reaching God through the good paths, and who held Shiva in his heart and praised him. I had also gained, in full, the supreme wisdom that conquers the mind. Along the very path by which countless gods, asuras and human beings travel to the upper worlds, I too entered that subtle sky, and came down toward this earth.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    நல் நெறிகளின் மூலம் இறைவனை அடையும் வழிகளை அறிந்து, சிவனை மனதுள் வைத்துத் துதித்த முனிவனாக நான் இருந்தேன்.

    I lived as a sage who knew the ways of reaching God through the good paths, and who held Shiva in his heart and praised him.

  • வரி 2

    மனதை வெல்லக்கூடிய பேரறிவு ஞானத்தை மிகவும் பெற்ற முனிவராகவும் நான் இருந்தேன்.

    I had also gained, in full, the supreme wisdom that conquers the mind.

  • வரி 3

    பல்லாயிரக்கணக்கான தேவர்களும் அசுரர்களும் மனிதர்களும் மேலுலகம் செல்லும் வழியே,

    Along the very path by which countless gods, asuras and human beings travel to the upper worlds,

  • வரி 4

    நுண்ணிய (சூட்சும) வானத்தின் வழியே யானும் புகுந்து இந்தப் பூமியை நோக்கி வந்தேன்.

    I too entered that subtle sky, and came down toward this earth.

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

உரை · meaning

இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன. உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும். உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும். இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

The texts God declared gain their glory when their meaning is recited with inner understanding. The meaning of the exalted Veda too should be recited in this way, through his grace and with inner understanding. When body and mind become absorbed as one, feelings of supreme bliss rise up from within. All of this, God, my own guru, gave to me out of the compassion he held for me.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன.

    The texts God declared gain their glory when their meaning is recited with inner understanding.

  • வரி 2

    உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும்.

    The meaning of the exalted Veda too should be recited in this way, through his grace and with inner understanding.

  • வரி 3

    உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும்.

    When body and mind become absorbed as one, feelings of supreme bliss rise up from within.

  • வரி 4

    இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

    All of this, God, my own guru, gave to me out of the compassion he held for me.

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

உரை · meaning

இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை, இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்தேன். அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தேன். உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள்; அந்த இறைவனை அனைவரும் உள்ளுணர்வு கொண்டு அறியவே திருமந்திரத்தை வழங்கினேன். இதை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதிப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து, யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

I thought that this whole world should receive the very same supreme bliss I received by reaching God. I also thought that I should declare the true meaning of the Veda that dwells within every world. God, present mingled with beings' bodies as their very life, is the whole meaning of the Veda; I gave this Thirumantiram so that everyone might come to know that God with inner understanding. For those who hold this in their minds with real desire, dwelling on it and praising it again and again, God's own grace will come to them of itself, and they will attain the very same supreme bliss I received.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை அடைந்து யான் பெற்ற பேரின்பத்தை, இந்த உலகத்திலுள்ள அனைவரும் பெற வேண்டும் என்று நினைத்தேன்.

    I thought that this whole world should receive the very same supreme bliss I received by reaching God.

  • வரி 2

    அண்டங்கள் அனைத்திலும் உறைந்து நிற்கும் வேதத்தின் உண்மைப் பொருளைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றும் நினைத்தேன்.

    I also thought that I should declare the true meaning of the Veda that dwells within every world.

  • வரி 3

    உயிர்களின் உடலோடு கலந்து உயிராக நிற்கும் இறைவனே வேதத்தின் முழுப்பொருள்; அந்த இறைவனை அனைவரும் உள்ளுணர்வு கொண்டு அறியவே திருமந்திரத்தை வழங்கினேன்.

    God, present mingled with beings' bodies as their very life, is the whole meaning of the Veda; I gave this Thirumantiram so that everyone might come to know that God with inner understanding.

  • வரி 4

    இதை மனம் விரும்பி நினைத்து நினைத்துத் துதிப்பவர்களுக்கு இறைவனின் திருவருள் தானாகவே வந்தடைந்து, யான் பெற்ற பேரின்பம் கிடைக்கும்.

    For those who hold this in their minds with real desire, dwelling on it and praising it again and again, God's own grace will come to them of itself, and they will attain the very same supreme bliss I received.

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடு கூடிநின் றோதலும் ஆமே.

உரை · meaning

பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை, சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை, ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி, தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

God, who is without birth and without death, who bears the name Nandi, our guru, whom all the gods in heaven go and worship with joined palms and full honour, come, all of you, gather together with a firm and unwavering mind, and recite the songs of the Thirumantiram, holding them within a heart that never forgets him.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை,

    God, who is without birth and without death, who bears the name Nandi, our guru,

  • வரி 2

    சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை,

    whom all the gods in heaven go and worship with joined palms and full honour,

  • வரி 3

    ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி,

    holding within a heart that never forgets him the songs of the Thirumantiram,

  • வரி 4

    தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

    come, all of you, gather together with a firm and unwavering mind, and recite them.

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

உரை · meaning

சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே. உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான். சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

God is the one who set a proper measure to the sun's own fire, so that it would not grow so great as to destroy the worlds. He is the one who set a proper measure of seven worlds within every universe, and a proper measure to the body, so that beings could be born there. So that those beings could rise to a higher state, he made this Tamil treatise, the Thirumantiram, be spoken through me, also within a proper measure. God is the one who so arranged that the meaning of this, once spoken, would not go to waste through mere recitation by mouth, but would be known only through direct experience.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன்.

    God is the one who set a proper measure to the sun's own fire, so that it would not grow so great as to destroy the worlds.

  • வரி 2

    ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே.

    He is the one who set a proper measure of seven worlds within every universe, and a proper measure to the body, so that beings could be born there.

  • வரி 3

    உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான்.

    So that those beings could rise to a higher state, he made this Tamil treatise, the Thirumantiram, be spoken through me, also within a proper measure.

  • வரி 4

    சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

    God is the one who so arranged that the meaning of this, once spoken, would not go to waste through mere recitation by mouth, but would be known only through direct experience.

அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்படிகண் டிலர்மீண்டும் பார்மிசைக் கூடிஅடிகண் டிலேன்என் றச்சுதன் சொல்லமுடிகண்டன் என்றயன் பொய்மொழிந் தானே.

உரை · meaning

தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டுக் கொண்டிருந்தபோது, சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று, இத்தூணின் அடியையோ அல்லது உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார். பிரம்மன், பறந்து உச்சியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து அன்னப் பறவையாகப் பறந்து சென்றார். திருமால், பூமியைக் குடைந்து அடியைக் கண்டுவிடலாம் என்று நினைத்து பன்றியாகக் குடைந்து சென்றார். இருவரும் தங்கள் எண்ணப்படி அடியையும் உச்சியையும் காணாமல் பூமியின் மேல் மீண்டும் வந்து நின்றனர். அடியைக் காண முடியவில்லை என்று திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் உச்சியைக் கண்டுவிட்டேன் என்று பொய் கூறினான்.

இப்பாடலில் திருமூலர் ஒரு புராணக் கதையைச் சித்தரிப்பது போல் இருந்தாலும், இறைவனின் திருவடிகளைக் கண்டு அவன் திருவடிகளின் கீழ் இருப்பதே பேரின்பம் என்பதை அனுபவத்தில் கண்டு அறிந்த திருமூலர் (பாடல் #82இல் கூறியபடி), அந்தப் பேரின்பத்தை அனைவரும் அடையும் வழியாகவே திருமந்திரத்தை வழங்கினேன் என்பதையே இங்கு உணர்த்துகிறார்.

While Brahma and Thirumal were arguing over who among them was greater, Sivaperuman stood as a vast pillar of fire and declared that whoever could see either the base or the summit of this pillar would be the greater one. Brahma thought he could fly up and see the summit, and took the form of a swan and flew upward. Thirumal thought he could dig down and see the base, and took the form of a boar and burrowed downward. Neither found what they sought, and both came back and stood together again upon the earth. Thirumal admitted that he had not been able to see the base. Brahma lied, and claimed that he had seen the summit.

Though Thirumoolar seems in this verse merely to be depicting a mythological story, what he makes known here is this: having come to know through his own experience, as he said in verse 82, that supreme bliss lies in beholding God's holy feet and remaining beneath them, he gave the Thirumantiram precisely as the way for everyone to attain that same supreme bliss.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    தமக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் திருமாலும் வாதிட்டபோது, சிவபெருமான் ஒரு மாபெரும் நெருப்புத் தூணாக நின்று, அதன் அடியையோ உச்சியையோ காண்பவரே பெரியவர் என்று அறிவித்தார்.

    While Brahma and Thirumal were arguing over who among them was greater, Sivaperuman stood as a vast pillar of fire and declared that whoever could see its base or its summit would be the greater one.

  • வரி 2

    பிரம்மன் அன்னப் பறவையாகப் பறந்து உச்சியைத் தேடினார்; திருமால் பன்றியாகக் குடைந்து அடியைத் தேடினார். இருவரும் காணமுடியாமல் பூமியின்மேல் மீண்டும் ஒன்றுகூடி நின்றனர்.

    Brahma took the form of a swan and flew up seeking the summit; Thirumal took the form of a boar and burrowed down seeking the base. Neither found it, and both came together again upon the earth.

  • வரி 3

    அடியைக் காணவில்லை என்று அச்சுதனாகிய திருமால் ஒப்புக்கொண்டார்.

    Achuthan, Thirumal, admitted, "I did not see the base."

  • வரி 4

    உச்சியைக் கண்டுவிட்டேன் என்று அயனாகிய பிரம்மன் பொய் கூறினான்.

    Ayan, Brahma, lied, and said, "I saw the summit."

பெற்றமும் மானும் மழுவும் பிறிவற்றதற்பரன் கற்பனை யாகும் சராசரத்துஅற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

உரை · meaning

காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன். அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின. என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல், தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.

He is the self-manifest God who bears the bull, the deer and the mazhu, his battle-axe. All of this universe and everything within it arose from his very thought. Out of the compassion he held for me, he granted me the true reality, and upon this servant's head he placed his own beneficent golden feet, and, our Nandi, standing as our own guru, gave us all the Agamas.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    காளையும் (இடபம்), மானும், மழுவும் (ஆயுதம்) தரித்துத் தானே தோன்றிய இறைவன் அவன்.

    He is the self-manifest God who bears the bull, the deer and the mazhu, his battle-axe.

  • வரி 2

    அவனுடைய கற்பனையிலிருந்தே (எண்ணத்திலிருந்தே) இந்த அண்டசராசரங்கள் அனைத்தும் தோன்றின.

    All of this universe and everything within it arose from his very thought.

  • வரி 3

    என்மேல் கொண்ட கருணையினால் உண்மைப் பொருளையும் வழங்கி, அடியவனாகிய என் தலைமேல்,

    Out of the compassion he held for me, he granted me the true reality, and upon this servant's head,

  • வரி 4

    தன்னுடைய நன்மை தரும் பொற்பாதங்களையும் வைத்து, ஆகமங்கள் அனைத்தையும் எங்கள் நந்தியாகிய அவன் எங்களின் குருநாதராக இருந்து வழங்கினான்.

    he placed his own beneficent golden feet, and, our Nandi, standing as our own guru, gave us all the Agamas.

ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினைமாயத்தை மாமாயை தன்னில் வரும்பரைஆயத்தை அச்சிவன் தன்னை யகோசரவீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

உரை · meaning

உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும், அவனை அறியும் ஞானத்தையும், உயிருக்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனையும், அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையையும், அந்த மாயையை ஆளும் சிவத்தையும், இந்தச் சிவத்திலிருந்து வரும் சக்தியையும், சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து, இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி, யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.

The God who must be known through inner awareness, the wisdom that grants the knowledge to know him, and God as the soul present within every being, the maya that stops that soul from knowing him, Sivam who rules that maya, and the Sakthi that comes forth from that Sivam, and realising within myself Sadasivamurthy, in whom Sivam and Sakthi are joined together, and explaining fully the tattvas of sound and light that are the ways to reach God, I gave this garland of verses, the Thirumantiram.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    உணர்வினால் அறியப்பட வேண்டிய இறைவனையும், அவனை அறியும் ஞானத்தையும், உயிருக்குள் ஆன்மாவாக இருக்கும் இறைவனையும்,

    The God who must be known through inner awareness, the wisdom that grants the knowledge to know him, and God as the soul present within every being,

  • வரி 2

    அந்த ஆன்மாவை அறியவிடாமல் தடுக்கும் மாயையையும், அந்த மாயையை ஆளும் சிவத்தையும், இந்தச் சிவத்திலிருந்து வரும் சக்தியையும்,

    the maya that stops that soul from knowing him, Sivam who rules that maya, and the Sakthi that comes forth from that Sivam,

  • வரி 3

    சிவமும் சக்தியும் சேர்ந்த சதாசிவமூர்த்தியையும் தனக்குள்ளே உணர்ந்து,

    and realising within myself Sadasivamurthy, in whom Sivam and Sakthi are joined together,

  • வரி 4

    இறைவனை அடையும் வழிகளான ஓலி ஓளி தத்துவங்கள் அனைத்தையும் விளக்கி, யாம் வழங்கியதே இந்தத் திருமந்திர மாலை.

    and explaining fully the tattvas of sound and light that are the ways to reach God, I gave this garland of verses, the Thirumantiram.

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கரும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பின் கயிலை வழியில்வந் தேனே.

உரை · meaning

ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன், பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவனும், ஆனந்த வடிவானவனுமான நந்தி அவனே. மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தனும் அவனே. அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று, நானும் அதன்படியே அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.

The guru who graciously explained the meaning of the Agamas and the Vedas is himself the very form of the flame of true wisdom called the supreme reality. He is Nandi, of immeasurable greatness, the very form of bliss. He is also the dancer who performs the joyous dance that cuts away the three malams. Taking the word spoken by that great God as a command, I too, following it, came in search of this world along the path of Mount Kailash, rich with rare and abundant blessings.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன், பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன்.

    The guru who graciously explained the meaning of the Agamas and the Vedas is himself the very form of the flame of true wisdom called the supreme reality.

  • வரி 2

    அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவனும், ஆனந்த வடிவானவனுமான நந்தி அவனே.

    He is Nandi, of immeasurable greatness, the very form of bliss.

  • வரி 3

    மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தனும் அவனே; அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று,

    He is also the dancer who performs the joyous dance that cuts away the three malams; taking the word spoken by that great God as a command,

  • வரி 4

    நானும் அதன்படியே அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.

    I too, following it, came in search of this world along the path of Mount Kailash, rich with rare and abundant blessings.

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.

உரை · meaning

குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

It was only by the grace of God, my own guru, that I entered the body of Moolan, the cowherd. It was only by his grace that, remaining afterward in that same body in a state of penance, I was transformed into Sadasivam himself. It was only by his grace that I attained true wisdom and remained dwelling within it. It was only by his grace that I remained with him always.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன்.

    It was only by the grace of God, my own guru, that I entered the body of Moolan, the cowherd.

  • வரி 2

    அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன்.

    It was only by his grace that, remaining afterward in that same body in a state of penance, I was transformed into Sadasivam himself.

  • வரி 3

    அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன்.

    It was only by his grace that I attained true wisdom and remained dwelling within it.

  • வரி 4

    அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

    It was only by his grace that I remained with him always.

இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடிஅருக்கின்ற மூலத்துள் அங்கே இருக்கும்அருக்கனும் சோமனும் ஆரழல் வீசஉருக்கிய ரோமம் ஒளிவிடுந் தானே.

உரை · meaning

இறைவன் வழங்கிய ஆகமங்கள் எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்கின்றன. அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருப்பவன் இறைவனே. உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல, உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக அவன் வீசிக்கொண்டே இருக்கிறான்.

The Agamas that God gave are uncountable, many crores in number. God himself is present as the very root and foundation of all those Agamas. Within the bodies of living beings, the way the sun and the moon cast their beautiful light, he shines forth like a ray of molten gold.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் வழங்கிய ஆகமங்கள் எண்ணமுடியாத அளவு பல கோடிகளாக இருக்கின்றன.

    The Agamas that God gave are uncountable, many crores in number.

  • வரி 2

    அந்த ஆகமங்களின் அடிப்படை மூலப் பொருளாக வீற்றிருப்பவன் இறைவனே.

    God himself is present as the very root and foundation of all those Agamas.

  • வரி 3

    உயிர்களின் உடலுக்குள் சூரியனும் சந்திரனும் அழகான ஒளி வீசுவதுபோல,

    Within the bodies of living beings, the way the sun and the moon cast their beautiful light,

  • வரி 4

    உருக்கிய பொன் போன்ற ஒளிக்கதிராக அவன் வீசிக்கொண்டே இருக்கிறான்.

    he shines forth like a ray of molten gold.

பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னைஇயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்முயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானைஇயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.

உரை · meaning

நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனின் திருநாமத்தை நான் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன். அவனை எனது நெஞ்சத்துள் வைத்து, இரவு பகல் பாராமல் இதைச் செய்வேன். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன். எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.

I go on speaking the sacred name of God, who bears the name Nandi, always. I hold him within my own heart and do this without regard for night or day. I remain always with the thought that I must reach my Lord, who stands lofty over sky and earth alike in the form of light. That great light which shines of its own nature, lit by no one, is the very God I worship.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    நந்தி எனும் பெயர் கொண்ட இறைவனின் திருநாமத்தை நான் எப்போதும் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

    I go on speaking the sacred name of God, who bears the name Nandi, always.

  • வரி 2

    அவனை எனது நெஞ்சத்துள் வைத்து, இரவு பகல் பாராமல் இதைச் செய்வேன்.

    I hold him within my own heart and do this without regard for night or day.

  • வரி 3

    விண்ணுக்கும் மண்ணுக்கும் ஓங்கி நிற்கும் ஜோதி வடிவான எம்பெருமானை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் எப்போதும் இருப்பேன்.

    I remain always with the thought that I must reach my Lord, who stands lofty over sky and earth alike in the form of light.

  • வரி 4

    எவரும் ஏற்றி வைக்காமல் இயல்பாகவே ஒளிரும் மாபெரும் ஜோதியே நான் வணங்கும் இறைவன் ஆவான்.

    That great light which shines of its own nature, lit by no one, is the very God I worship.

திருமந்திரம் பாடல் #73

1 / 21

0:000:00
திருமூலர்பாடல் 73

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com