திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 86

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

பிறப்பிலி நாதனைப் பேர்நந்தி தன்னைச்சிறப்பொடு வானவர் சென்றுகை கூப்பிமறப்பிலா நெஞ்சினுள் மந்திர மாலைஉறைப்பொடு கூடிநின் றோதலும் ஆமே.

உரை · meaning

பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை, சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை, ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி, தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

God, who is without birth and without death, who bears the name Nandi, our guru, whom all the gods in heaven go and worship with joined palms and full honour, come, all of you, gather together with a firm and unwavering mind, and recite the songs of the Thirumantiram, holding them within a heart that never forgets him.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பிறப்பு இறப்பு இல்லாதவனும், நந்தி எனப் பேர் பெற்ற குருநாதனுமாகிய இறைவனை,

    God, who is without birth and without death, who bears the name Nandi, our guru,

  • வரி 2

    சீரும் சிறப்போடும் வானத்திலிருக்கும் தேவர்களெல்லாம் சென்று கைகூப்பித் தொழும் அந்த இறைவனை,

    whom all the gods in heaven go and worship with joined palms and full honour,

  • வரி 3

    ஒரு பொழுதும் மறக்காத நெஞ்சத்தினுள் திருமந்திர பாடல்களைப் பதிவேற்றி,

    holding within a heart that never forgets him the songs of the Thirumantiram,

  • வரி 4

    தடுமாற்றமில்லாத உறுதியான மனதோடு அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று ஓதி வாருங்கள்.

    come, all of you, gather together with a firm and unwavering mind, and recite them.

திருமந்திரம் பாடல் #86

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com