திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 87

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

உரை · meaning

சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே. உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான். சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

God is the one who set a proper measure to the sun's own fire, so that it would not grow so great as to destroy the worlds. He is the one who set a proper measure of seven worlds within every universe, and a proper measure to the body, so that beings could be born there. So that those beings could rise to a higher state, he made this Tamil treatise, the Thirumantiram, be spoken through me, also within a proper measure. God is the one who so arranged that the meaning of this, once spoken, would not go to waste through mere recitation by mouth, but would be known only through direct experience.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன் இறைவன்.

    God is the one who set a proper measure to the sun's own fire, so that it would not grow so great as to destroy the worlds.

  • வரி 2

    ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களையும், உயிர்கள் பிறக்க வேண்டிய உடலையும் அளவோடு வைத்தவன் அவனே.

    He is the one who set a proper measure of seven worlds within every universe, and a proper measure to the body, so that beings could be born there.

  • வரி 3

    உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு, என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தான்.

    So that those beings could rise to a higher state, he made this Tamil treatise, the Thirumantiram, be spoken through me, also within a proper measure.

  • வரி 4

    சொல்லப்பட்ட இதன் பொருள் வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி, அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

    God is the one who so arranged that the meaning of this, once spoken, would not go to waste through mere recitation by mouth, but would be known only through direct experience.

திருமந்திரம் பாடல் #87

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com