திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 84

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்உத்தம மாகவே ஓதிய வேதத்தின்ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்திஅத்தன் எனக்கிங் கருளால் அளித்ததே.

உரை · meaning

இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன. உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும். உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும். இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

The texts God declared gain their glory when their meaning is recited with inner understanding. The meaning of the exalted Veda too should be recited in this way, through his grace and with inner understanding. When body and mind become absorbed as one, feelings of supreme bliss rise up from within. All of this, God, my own guru, gave to me out of the compassion he held for me.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் கூறிய நூல்களின் பொருளைத் தன் உள்ளத்தில் உணர்ந்து ஓதும்போது அவை சிறப்படைகின்றன.

    The texts God declared gain their glory when their meaning is recited with inner understanding.

  • வரி 2

    உத்தமமான வேதத்தின் பொருளையும் அவ்வாறே அவனது அருளால் உள்ளுணர்ந்து ஓதவேண்டும்.

    The meaning of the exalted Veda too should be recited in this way, through his grace and with inner understanding.

  • வரி 3

    உடலும் மனமும் ஒன்று போல் லயித்திருக்கும்போது, உள்ளிருந்து பேரின்ப உணர்வுகள் உற்பத்தியாகும்.

    When body and mind become absorbed as one, feelings of supreme bliss rise up from within.

  • வரி 4

    இவை அனைத்தையும் என்மேல் கொண்ட கருணையால் எம் குருநாதனாகிய இறைவன் எமக்கு அளித்து அருளினான்.

    All of this, God, my own guru, gave to me out of the compassion he held for me.

திருமந்திரம் பாடல் #84

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com