திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 91

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதிஅளப்பில் பெருமையன் ஆனந்த நந்திதுளக்கரும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்துவளப்பின் கயிலை வழியில்வந் தேனே.

உரை · meaning

ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன், பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன். அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவனும், ஆனந்த வடிவானவனுமான நந்தி அவனே. மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தனும் அவனே. அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று, நானும் அதன்படியே அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.

The guru who graciously explained the meaning of the Agamas and the Vedas is himself the very form of the flame of true wisdom called the supreme reality. He is Nandi, of immeasurable greatness, the very form of bliss. He is also the dancer who performs the joyous dance that cuts away the three malams. Taking the word spoken by that great God as a command, I too, following it, came in search of this world along the path of Mount Kailash, rich with rare and abundant blessings.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    ஆகம வேதப் பொருளை விளக்கி அருளிய குருநாதன், பரம்பொருள் எனப்படும் உண்மையான ஞானத்தின் ஜோதி வடிவானவன்.

    The guru who graciously explained the meaning of the Agamas and the Vedas is himself the very form of the flame of true wisdom called the supreme reality.

  • வரி 2

    அளவிடமுடியாத பெருமைகளைக் கொண்டவனும், ஆனந்த வடிவானவனுமான நந்தி அவனே.

    He is Nandi, of immeasurable greatness, the very form of bliss.

  • வரி 3

    மும்மலங்களையும் அறுக்கும் ஆனந்த நடனத்தை ஆடும் கூத்தனும் அவனே; அப்பேர்பட்ட இறைவன் சொன்ன சொல்லைக் கட்டளையாக ஏற்று,

    He is also the dancer who performs the joyous dance that cuts away the three malams; taking the word spoken by that great God as a command,

  • வரி 4

    நானும் அதன்படியே அரும்பெரும் வளங்கள் நிறைந்த திருக்கயிலாய வழியில் இந்த உலகம் தேடி வந்தேன்.

    I too, following it, came in search of this world along the path of Mount Kailash, rich with rare and abundant blessings.

திருமந்திரம் பாடல் #91

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com