திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 92

பாயிரம்திருமூலர்

தொடர்ந்து படிக்கread this section continuously

நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன்நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்நந்தி அருளாலே நானிருந் தேனே.

உரை · meaning

குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன். அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன். அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன். அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

It was only by the grace of God, my own guru, that I entered the body of Moolan, the cowherd. It was only by his grace that, remaining afterward in that same body in a state of penance, I was transformed into Sadasivam himself. It was only by his grace that I attained true wisdom and remained dwelling within it. It was only by his grace that I remained with him always.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    குருநாதராகிய இறைவனின் அருளினால்தான் நான் இடையன் மூலனின் உடலில் புகுந்தேன்.

    It was only by the grace of God, my own guru, that I entered the body of Moolan, the cowherd.

  • வரி 2

    அதன்பிறகும் அவரின் அருளினால்தான் அந்த உடலிலேயே தவ நிலையில் இருந்து சதாசிவமாகவே மாறினேன்.

    It was only by his grace that, remaining afterward in that same body in a state of penance, I was transformed into Sadasivam himself.

  • வரி 3

    அவரின் அருளினால்தான் உண்மையான ஞானத்தை அடைந்து அதனுள்ளேயே உறைந்திருந்தேன்.

    It was only by his grace that I attained true wisdom and remained dwelling within it.

  • வரி 4

    அவரின் அருளினால்தான் அவரோடே எப்போதும் இருந்தேன்.

    It was only by his grace that I remained with him always.

திருமந்திரம் பாடல் #92

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com