தொடர்ந்து படிக்கread this section continuously
இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடிஇருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தேஇருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தேஇருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.
உரை · meaning
இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன். இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன். பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன். எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.
I remained in this body for uncountable crores of years. I remained in a place without night and without day, the subtle expanse. I remained in a place praised by thousands upon thousands of gods, sages and siddhas. I remained seated beneath the peerless, matchless holy feet of God, my own guru.
வரி வாரியாக · line by line
- வரி 1
இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தேன்.
I remained in this body for uncountable crores of years.
- வரி 2
இரவு பகல் இல்லாத இடத்தில், அதாவது சூட்சும வெளியில், இருந்தேன்.
I remained in a place without night and without day, the subtle expanse.
- வரி 3
பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறும் இடத்தில் இருந்தேன்.
I remained in a place praised by thousands upon thousands of gods, sages and siddhas.
- வரி 4
எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.
I remained seated beneath the peerless, matchless holy feet of God, my own guru.
திருமந்திரம் பாடல் #80





