திருமூலர் அருளிய திருமந்திரம்
அவையடக்கம்

பாயிரம் பாடல் 95–98 (4 பாடல்கள்)

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையைஆரறி வார்இந்த அகலமும் நீளமும்பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்வேரறி யாமை விளம்புகின் றேனே.

உரை · meaning

எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல். எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன். எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே. அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

Our Lord carries a greatness beyond anyone's ability to know. He is beyond measure, so that no one can grasp his height or breadth. He is like a vast flame that cannot even be named because no one can come to know and call him by any name, and he has for himself neither a beginning nor an end. It is only through his own grace that I have come to know his precious greatness, and it is that which I now declare to you.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல்.

    Our Lord carries a greatness beyond anyone's ability to know.

  • வரி 2

    எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன்.

    He is beyond measure, so that no one can grasp his height or breadth.

  • வரி 3

    எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே.

    He is like a vast flame that cannot even be named because no one can come to know and call him by any name, and he has for himself neither a beginning nor an end.

  • வரி 4

    அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

    It is only through his own grace that I have come to know his precious greatness, and it is that which I now declare to you.

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

உரை · meaning

இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

I do not know the way of those who receive God's grace by singing devotional songs to him with music. I do not know the way of those who receive his grace by dancing before him in joyous devotion. I do not know the way of those who receive his grace by seeking him out with true love. Nor do I know the way of those who receive his grace by searching for where God dwells and finding him within themselves; and yet it was the great grace of Sadasivamurthy alone that took hold of me and made me know him fully.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive God's grace by singing devotional songs to him with music.

  • வரி 2

    இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive his grace by dancing before him in joyous devotion.

  • வரி 3

    இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive his grace by seeking him out with true love.

  • வரி 4

    இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

    Nor do I know the way of those who receive his grace by searching for where God dwells and finding him within themselves; and yet it was the great grace of Sadasivamurthy alone that took hold of me and made me know him fully.

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்பின்னை உலகம் படைத்த பிரமனும்உன்னும் அவனை உணரலு மாமே.

உரை · meaning

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது. இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே. படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான். அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

Sadasivamurthy cannot be understood merely by reciting the eternal Vedas. He rises up and dwells within the sweet music of the devotees who sing to him. Even Brahma, whom God created to carry out the work of creation, meditates upon him. And it is only through his own grace that he can be understood at all.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது.

    Sadasivamurthy cannot be understood merely by reciting the eternal Vedas.

  • வரி 2

    இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே.

    He rises up and dwells within the sweet music of the devotees who sing to him.

  • வரி 3

    படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான்.

    Even Brahma, whom God created to carry out the work of creation, meditates upon him.

  • வரி 4

    அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

    And it is only through his own grace that he can be understood at all.

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரைமுத்திக் கிருந்த முனிவரும் தேவரும்ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்பத்திமை யால்இப் பயனறி யாரே.

உரை · meaning

இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும் முனிவர்களுக்கும் தேவர்களுக்கும், சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான். ஆனாலும், இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

To sages and gods performing penance on mountain peaks and in caves, seeking to know God and attain liberation, God himself graciously declared the supreme wisdom by which Sadasivamurthy can be known. And yet, without the awareness that God and they are one, thinking of God and themselves as separate, those who hold devotion for God and sing his praise remain without receiving the fruit of the very supreme wisdom that God gave.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனை உணர்ந்து முக்தி பெறவேண்டும் என்று மலை உச்சிகளிலும் குகைகளிலும் தவமிருக்கும்,

    To sages and gods performing penance on mountain peaks and in caves, seeking to know God and attain liberation,

  • வரி 2

    முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் சதாசிவமூர்த்தியை உணரக்கூடிய பேரறிவு ஞானத்தை இறைவனே கூறியருளினான்.

    sages and gods alike, God himself graciously declared the supreme wisdom by which Sadasivamurthy can be known.

  • வரி 3

    இறைவனும் தாமும் ஒன்றானவர்களே என்கிற உணர்வு இல்லாமல், இறைவனையும் தம்மையும் வேறு வேறாக எண்ணிக்கொண்டு,

    Yet without the awareness that God and they are one, thinking of God and themselves as separate,

  • வரி 4

    அவ்விறைவன்மேல் பக்திகொண்டு போற்றிப்பாடுபவர்கள், இறைவன் வழங்கிய பேரறிவு ஞானத்தின் பயனை அவர்கள் பெறாமலே இருக்கின்றார்கள்.

    those who hold devotion for God and sing his praise remain without receiving the fruit of the very supreme wisdom that God gave.

திருமந்திரம் பாடல் #95

1 / 4

0:000:00
அவையடக்கம்பாடல் 95

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com