திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 97

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்பின்னை உலகம் படைத்த பிரமனும்உன்னும் அவனை உணரலு மாமே.

உரை · meaning

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது. இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே. படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான். அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

Sadasivamurthy cannot be understood merely by reciting the eternal Vedas. He rises up and dwells within the sweet music of the devotees who sing to him. Even Brahma, whom God created to carry out the work of creation, meditates upon him. And it is only through his own grace that he can be understood at all.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    என்றும் நிலைத்திருக்கும் வேதங்களைச் சொல்லுவதால் மட்டும் சதாசிவமூர்த்தியை உணர முடியாது.

    Sadasivamurthy cannot be understood merely by reciting the eternal Vedas.

  • வரி 2

    இனிமையான இசையோடு பாடுகின்ற அடியவர்களின் இசையினுள்ளே எழுந்தருளுகின்றவன் அவனே.

    He rises up and dwells within the sweet music of the devotees who sing to him.

  • வரி 3

    படைப்புத் தொழிலைச் செய்யவேண்டி இறைவன் படைத்த பிரம்மனும் அவனையே தியானிக்கிறான்.

    Even Brahma, whom God created to carry out the work of creation, meditates upon him.

  • வரி 4

    அவனது அருள் கொண்டே அவனை உணர முடியும்.

    And it is only through his own grace that he can be understood at all.

திருமந்திரம் பாடல் #97

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com