திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 96

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

பாடவல் லார்நெறி பாட அறிகிலேன்ஆடவல் லார்நெறி ஆட அறிகிலேன்நாடவல் லார்நெறி நாட அறிகிலேன்தேடவல் லார்நெறி தேட கில்லேனே.

உரை · meaning

இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான். இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

I do not know the way of those who receive God's grace by singing devotional songs to him with music. I do not know the way of those who receive his grace by dancing before him in joyous devotion. I do not know the way of those who receive his grace by seeking him out with true love. Nor do I know the way of those who receive his grace by searching for where God dwells and finding him within themselves; and yet it was the great grace of Sadasivamurthy alone that took hold of me and made me know him fully.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவனைத் துதித்துப் பாடல்களை இசைத்துப் பாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive God's grace by singing devotional songs to him with music.

  • வரி 2

    இறைவனை ஆனந்தக் கூத்தாடி அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive his grace by dancing before him in joyous devotion.

  • வரி 3

    இறைவனை உண்மையான அன்போடு நாடிச்சென்று அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியை அறியாதவன் யான்.

    I do not know the way of those who receive his grace by seeking him out with true love.

  • வரி 4

    இறைவன் எங்கே இருக்கின்றான் என்று தேடி அலைந்து அவனைத் தமக்குள்ளே கண்டு அவனருளைப் பெறக்கூடியவர்களின் வழியையும் அறியாதவன் யான்; ஆயினும் எம்மை ஆட்கொண்டு அவனை முழுவதும் அறியவைத்தது சதாசிவமூர்த்தியின் பேரருளே.

    Nor do I know the way of those who receive his grace by searching for where God dwells and finding him within themselves; and yet it was the great grace of Sadasivamurthy alone that took hold of me and made me know him fully.

திருமந்திரம் பாடல் #96

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com