திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 95

பாயிரம்அவையடக்கம்

தொடர்ந்து படிக்கread this section continuously

ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையைஆரறி வார்இந்த அகலமும் நீளமும்பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்வேரறி யாமை விளம்புகின் றேனே.

உரை · meaning

எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல். எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன். எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே. அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

Our Lord carries a greatness beyond anyone's ability to know. He is beyond measure, so that no one can grasp his height or breadth. He is like a vast flame that cannot even be named because no one can come to know and call him by any name, and he has for himself neither a beginning nor an end. It is only through his own grace that I have come to know his precious greatness, and it is that which I now declare to you.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    எவராலும் அறிய முடியாத அளவிற்குப் பெருமைகளை உடையவன் எங்கள் அண்ணல்.

    Our Lord carries a greatness beyond anyone's ability to know.

  • வரி 2

    எவராலும் அவனின் உயரத்தையும் அகலத்தையும் அறிய முடியாத அளவிற்கு அளவிடமுடியாதவன் அவன்.

    He is beyond measure, so that no one can grasp his height or breadth.

  • வரி 3

    எவராலும் அறிந்துகொண்டு அழைத்துவிட முடியாத அளவிற்குப் பெயரிடமுடியாத மாபெரும் சுடர் போன்று இருப்பவனும், தனக்கென்று ஆரம்பமும் முடிவும் இல்லாதவனும் அவனே.

    He is like a vast flame that cannot even be named because no one can come to know and call him by any name, and he has for himself neither a beginning nor an end.

  • வரி 4

    அப்பேர்பட்ட சதாசிவமூர்த்தியின் அருமை பெருமைகளை அவன் அருள் மூலமே அறிந்துகொண்டு, அதை யான் உங்களுக்குச் சொல்லுகின்றேன்.

    It is only through his own grace that I have come to know his precious greatness, and it is that which I now declare to you.

திருமந்திரம் பாடல் #95

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com